Tuesday, December 25, 2007

கீதை - 3

கைபேசியில் அலுவலகத்தில்ருந்தும் தொலைபேசியில் ஊரில் இருந்து அம்மாவும் அழைத்தனர். அம்மாவிடம் பிறகு பேசுகிறேன் என்றவாரு அலுவலகம் பயனித்தான். செல்லும் வழியிலே என்ன ஏது என்று கேட்டவாரே சென்றவனுக்கு என்ன நடந்து இருக்கும் என்று ஒரு அளவிற்கு ஊகிக்க முடிந்தது.

சென்று பார்த்தாலும் அவனது கனிப்பும் சரியே, அமர்ந்து ஆகவேண்டிய காரியங்களை பார்த்து கொண்டிருக்கையிலேயே, குழு தலை, மேளாலர், இயக்குனர், என்று ஒரு உயர் வட்ட பாதுகாப்பே அவனிடம் வந்து சேர்ந்தது. வேலை என்னமோ ஒரு அரை மணியில் முடித்துவிடலாம் என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் வந்த உயர்மட்ட குழுவோ இவனிடமும் இவனது குழுத்தகையிடமும் என்ன ஏது என்று விணாவி கொண்டு இருந்தார்கள். வேலை கொஞ்சம் விளக்கம் கொஞ்சம் என்று இவன் இருக்க. இவனது குழுத்தலையே, இவனிடம் கொஞ்சம், மற்றவரிடம் கொஞ்சம் என்று பேசி சமாதானங்களையும், இதற்கு முன் எப்போதெல்லாம் இப்படி நடந்தது என்று விளக்கியும். தங்களது தற்பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது என்றெல்லாம் விளக்கிகொண்டு இருந்தார்.

வந்த உயர் மட்ட குழுவிற்கு ஒரே குறிக்கேள் தான், நாளை காலை தங்களை கேட்டால் தவறு எங்கள் மீது இல்லை என்று சொல்ல வேண்டும். அத்ற்கு என்ன என்ன வேண்டுமே அந்த செய்திகளை மட்டுமே கேட்டு தெரிந்து கலைந்த வண்ணம் இருந்தனர். என்ன அவரவர் அளவுக்கு ஏற்றார்போல் நீட்டியும், மடக்கியும் கேட்டுவிட்டு போனார்கள்.

மும்முரமாக நிரலில் மூழ்கி இருந்தவனை குழு தலை கலைத்தது, என்ன சரி பார் சரி பார் என்று சொன்னேனே. இப்போ பார்த்தாயா எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று. இவனுக்கோ அவை எதுவும் காதில் விழவே இல்லை. நமது பக்கம் தவறு எதுவும் நடந்ததாக தெரியவில்லை பிறகு எப்படி இப்படி நடந்தது என்று தகவல்களை சரி பார்க்கும் போது தான் தெளிவாயிற்று எங்கே இருந்து இந்த பிழற்சி பிறக்கிறது என்று. கண்டு பிடித்ததில், இவனைவிட இவனது குழுத்தலைக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி.

உடனே எங்கே எல்லாம் தகவல்களை தட்டி சொல்ல வேண்டுமோ அங்கே எல்லாம் தட்டி சொல்லியாச்சு. அவனும் அவனது குழுதலையும் புறப்படும் போது மறுபடியும் உயர்மட்ட குழு அலோசனை நடத்தான் விட்டது. இவர்கள் வெளியே செல்லும் போது அவர்கள் வருவதை பார்த்ததும், குழு தலை நீ போ, நான் இவர்களுக்கு விளக்கிகொள்கிறேப் என்று சொல்ல, அப்பாடா என்று வெளியேறினான்.

ஒரு அரை மணியில் வந்து விடலாம் என்று வந்தவன் திரும்பும் போது இரவு 1:00ஐ தாண்டி இருந்தது. பசியோ வயிற்றை கிள்ளியது. எங்கேயாவது ஏதாவது கிடைகிறதா பார்க்கலாம் என்று சென்றான். பார்த்துகொண்டே வந்ததில் வெகு தூரம் வந்து விட்டு இருந்தான். கிடைத்ததை வாங்கி கொண்டு வீடு திரும்பும் போது மணி 2ஐ தாண்டி இருந்தது.

அவசர அவசரமாக உண்டவன் படுக்க போகும் முன் பார்த்தான், இன்னும் ஒரு தொலைபேசி செய்தி இருக்க. பார்த்தவன், அம்மாவை கூப்பிடுவதாக சொன்னது நினைவுக்கு வர. தொடர்பு கொள்ள, அம்மாவோ என்னபா இன்னமும் தூங்காம இருக்கிற, உடம்பு என்ன ஆகிறது படு நாளைக்கு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி முடிக்க இருந்த தூக்கமும் தொலைந்தது அவனுக்கு.

என்னவாக இருக்கும் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், எல்லாம் விட்டு இப்படி இங்கே வந்து கிடக்கவேண்டிய தேவை தான் என்ன என்று மனம் மறுபடியும் குழப்ப துவங்க. படுக்கையில் தலையை புதைத்துவைத்து கொண்டான்.

தொடரும்.....

0 comments: