Sunday, December 9, 2007

கற்றது தமிழ் - விமர்சனம்

தலைப்பில் பாதியை மட்டும் கொடுத்து இருக்கிறார்கள். இவன் ஒரு கிறுக்கன், அவன் கற்றது தமிழ் என்று இருந்திருக்க வேண்டும்.

மற்ற படி படத்தில், மலுங்க மலுங்க விழிக்கும் அந்த விழியை தவிற கதையும் கூட இல்லை. நாயகனில் சரண்யாவை பார்த்தது போல் இருக்கிறது அந்த பெண்ணை பார்க்கும் போதெலாம். படத்தின் கோனமும், அவள் பேசும் விதமும் அப்படியே இருக்கிறது. இவைகள் தவிற கதைக்கூட நம்பும் படியாக ஏதும் இல்லை படத்தில்.

இதில் வாழவேண்டும் என்று நினைக்கும் போது காவலர்கள் வேட்டையாடுவதை போல் காட்சீயமைபு வேறு. constant Gardner படத்தை ஈ என்று எடுத்தபோது, அந்த அரங்க அமைப்பும், அந்த கதா பாத்திரமும் சீவாவை வெகுவாக பாதித்து இருக்கும் போலும். அதே போல் மற்றும் ஒரு படம் என்று ஏமாந்தார் போலும்.

அந்த கிறுக்கு கதா பாத்திரம் என்ன படித்து இருந்தாலும் இப்படி தான் செய்யும். அது இப்படி செய்வது கிறுக்கினால் படித்ததினால் அல்ல.......

0 comments: