Friday, December 7, 2007

நல்லவர்கள் உலகம் இது தானா

எது செஞ்சாலும் கேட்காமல் இருக்கும் அப்பா நல்லவர்

எது கேட்டாலும் ஏன் என்று கேட்க்காமல் எடுத்தும், வாங்கியும் தரும் அம்மா மிகவும் நல்லவள்

கூடவே இருந்துகொண்டு இவன்/இவள் செய்யும் அக்கிரமங்க்களை கண்டும் காணாமலும் இருக்கும் நண்பன் மிகவு நல்லவன்

என்ன பாவம் செய்தாலும் தண்டிக்கமலும் மட்டும் இல்லாமல் கேட்ப்பதை விட அதிகம் கொடுக்கும் கடவுள் நல்லவர்

படிக்கவோ, எழுதவோ, வீட்டுப்பாடம் என்று எதுவும் கேட்க்காத ஆசிரியர் மிகவும் நல்லவர்

ஓட்டுக்கு 1000 கொடுக்கும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் மிகவும் நல்லது

கேட்டவுடன் கடன் கொடுப்பதுடன் திருப்பி கொடு என்று கேட்க்காதவர் மிகவும் நல்லவர்

கட்டணத்துக்கு மேல் மிக அதிக இணாம் கொடுப்பவர் நல்ல வாடிக்கையாளர்

மீதம் சில்லரை கேட்க்காத பயணி மிகவும் கண்ணியமானவர்

காசு குறைந்தாலும் சீட்டு தரும் நடத்துனர் மிகவும் நல்ல நடத்துனர்

சொல்லும் இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்தி இறக்கிவிடுபவர் நல்ல ஓட்டுனர்

சொத்தை காய்களையும், சில்லரையும் கேட்டாகவர்கள் நல்லா காய்வாங்கும் வாடிக்கையாளர்

இது இல்லை அது இல்லை என்று சொல்லாதவன் நல்ல குடிமகன்

என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்காதவள் நல்ல மனைவி

என்ன சொன்னாலும் பணியும் ஆண் மிக சிறந்த கனவன்

இப்படி எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி இருப்பவைகள் தான் நல்லது என்றால் அதன் பொருள் தான் என்ன? சோம்பேறித்தனம் இல்லாமல் வேறு என்ன சொல்ல. மேலே சொன்ன அத்தனையிலும் இருக்கும் ஒரே ஒற்றுமை, தனக்கு சொந்தம் இல்லாத அல்லது உழைப்பால் அடையவேண்டியவைகளை கொஞ்சம் கூட உழைப்போ இல்லை வேறு எதுமோ இல்லாமல் அடைவது தான். இது தான் நல்லவர்களின் உலகமா. தலை சுற்றுகிறது.

2 comments:

')) said...

என்ன இதெல்லாம்?

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.

வரவர எதுக்குத்தான் கவலைப்படறதுன்னு இல்லாமப்போச்சே(-:

')) said...

வாங்க துளசி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இல்லை நாட்டிலே எங்கே போனாலும் இந்த நல்லவங்க தொல்லை தாங்க முடியில அது தான்.........