Thursday, December 20, 2007

கலைஞருக்கு என்னை கண்டு பயம் - திருவாளர் நடராசன்

"கலைஞருக்கு என் மீது இருப்பது ஒருவித பயம் கலந்த நட்பு....நடராசன் எதை செய்தாலும் சரியாத்தான் செய்வான். நம்மை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்! என்று நினைத்து. ரொம்ப கவனமாக பயத்துடனே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். இது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்க்களுக்கு தெரியவில்லை"

குமுதம் இரிப்போர்டர் பத்திரிக்கையில் வந்த செய்தி இது.

தன்னிடம் கொஞ்சம் காசும் அதை அள்ளிக்கொடுக்க மனமும் இருந்தால் போதும். பத்திரிக்கைகளை இப்படி என்ன, மனமோகன் சிங்குக்கு என்னை கண்டால் ஓடோடி ஒலிந்துகொள்வார். அமெரிக்க அதிபர் மேல் அங்கியை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்வார். ஐரோப்பா கூட்டமைப்பு தினமும் என்னை கேட்டுத்தான் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இப்படி என்ன வேண்டுமானாலும் எழுத வைக்கலாம் போலும்.

கேப்பையில் நெய்வடிகின்றது என்றால் கேட்டு எழுதுபவனுக்கு எங்கே போனது என்று தெரியவில்லை. எவ்வளவு கொட்டிக்கொடுத்தானோ தெரியவில்லை இந்த பத்திரிக்கைக்கு நடராசன். அது சரி அவனது பணமாக இருத்தால் தானே கவலை கொள்ள கதை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு என்று சொல்வார்களே அந்த மாதிரி. தங்கத் தாரகை விருதை போல இருக்கிறது இதுவும்.

குமுதம் பத்திரிக்கையே இன்னமும் இது போல் நிறைய பிதற்றல்களை எழுதவும். இலவச சேவையாக இருந்தால், கீழ்ப்பாக்கம் பக்கம் சென்றால் இன்னமும் இதைவிட அதிக பிதற்றல்கள் கிடைக்கும் நீங்களும் கவர்சி தலைப்புகளுடன் வெளியிடலாம். வாழ்த்துக்கள்.......

0 comments: