Monday, November 12, 2007

இலங்கையில் நடக்கும் சுதந்திர போராட்டமும், காந்தியவாதிகளும்.

ஆயுத போராட்டம் நடக்கும் வரை இலங்கை இனவாத்திற்கு தீர்வுகள் பிறக்கப்போவதில்லை. அதனால் இலங்கையில் நடக்கும் உள் நாட்டு போரில் தலையிடுவதோ அல்லது இரு தரப்பில் எவருக்கேனும் ஆதரவாக வாதிடக்கூட முடியாது என்று ஒரு பிரிவு வாதிடுவதும், பதிவிடுவதையும் பார்த்து வருகிறோம். அவர்களது கொள்கைகளையும், அதன் அடிப்படைகளையும் ஆராயும் முகமாக இந்த பதிவு அமையும்.

இவர்களது முடிவுகளை ஆராய்வதற்கு முன், இலங்கை போராட்டம் எதற்காக நடக்கிறது. அவர்களது கோரிக்கைகள் தான் என்ன என்று பார்ப்போம்.

1) இலங்கையில் சிங்களம் மட்டுமே மொழி.
2) சிங்களர்களுக்கு மட்டும் தான் இலங்கை.
3) பௌத்தம் மட்டுமே மதம்.

மொத்தத்தில் ஒரு மொழி, ஒரு மக்கள், ஒரு மதம். இது வெறும் வாய் வார்த்தையாக சொன்னதல்ல மாறாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டமாக வடிவமைத்து அறிவித்தது சுதந்திர இலங்கை. அறிவித்த நாள் முதல் தொடங்கிய போராட்டம் இன்றளவும் உக்கிரம் குறையாமல் ஒரு நெடிய பாதையும் கடந்து நடந்து கொண்டிருக்கிறது.

கொலைக்கு கொலை தீர்வாகாது, கண்ணுக்கு கண் என்று போனால் பின்னாளில் உலகமே இருண்டு போகும் என்று உரைத்த காந்திய வழியில் போராடினால் என்ன என்று கேட்க்கும் நண்பர்கள் காந்திக்கு பிறகு நெல்சன் மண்டேலா தலைமையில் அறப்போராட்ட வழியில் தென் ஆப்ரிக்கா சுதந்திரம் பெறவில்லையா என்றும் கூட வாதாடுகிறார்கள்.

நண்பர்களே அமெரிக்கா, பிரான்சு, சக்காட்லாந்து என்று நீளும் பட்டியலில் கடைசியாக ஆயுத போராட்டம் மூலம் சுதந்திரம் பெற்ற தேசமான இசுரேலுடன் வந்துநிற்கும். இன்றைக்கு சுதந்திரம் பெற்ற பிறகு அந்த தேசங்கள் எல்லாம் என்ன வன்முறையால் ஆட்கொண்டு சிதைந்து அழிந்து சின்னா பின்னமாகி மனித அவலங்களை கொண்டா திகழ்கிறது?

இல்லையே, அமெரிக்கா உலகின் மிகப்பொரிய மக்களாட்சி நாடு. இன்றைக்கு உலக வன்முறையை அடக்கு நாடாகவும் அது திகழ்கிறது. பிரான்சோ இந்தியாவுக்கும் இன்னபிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இராணுவ உதவி முதல் அறிவியல் சார்ந்த உதவிகளை வழங்கும் நாடாக திகழ்கிறது. இவ்வளவு ஏன், சுதந்திரதிற்கு பிறகு நிம்மதியாகவே உரங்காத நாடான இசுரேலும் கூட இராணுவத்திலும் சரி தொழில் நடத்துவதிலும் சரி முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.

பிறகு எதை வைத்து ஆயுதப்போராட்டம் கூடாது என்று இவர்கள் மறுக்கிறார்கள். காந்தி தேசத்தில் பிறந்து விட்ட ஒரே காரணாத்தாலா. அல்லது ஆயுத போராட்டம் தீர்வை தராது என்று எப்போதும்மே நிறூபிக்கப்பட்டு விட்டதா.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டது 1917 ஆம் ஆண்டில். அதற்கு பிறகு படி படியாக முன்னேறி 1947 ஆம் ஆண்டு அதாவது 30 ஆண்டு கால போராட்டதிற்கு பிறகு சுதந்திரம் பெற முடிந்தது. ஒரு 30 ஆண்டு காலம் அந்த ஒரு தனி மனிதனால் போராட்டங்கள் அறிவுக்கப்பட்டும், நிகழ்த்தப்பட்டும், அதுவும் அறவழியில் மட்டுமே என்று போராடி சுதந்திரம் வாங்கவில்லை என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழுகிறது.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு, தீவிரமாக எழுதவும் போராட்டம் நடத்தவும் இருந்த காந்தியை பிரித்தானிய அரசு கொல்லாமல் அத்தணை ஆண்டுகளும் உயிருடன் விட்டு வைத்திருந்தது. அது மட்டும் அல்லாது போராட்டம் நடத்தும் தொண்டர்களை அடக்கு முறை கொண்டு தாக்கிய பிரித்தானியரின் படையணிகள் அருகே அவர்களுக்கு உதவியாக வந்து இருந்த அவர்களது மனைவியர்களை ஒன்றுமே செய்யவில்லையே.

காந்தியின் மனைவி மரணபடுக்கையில் இப்பவோ அப்பவோ என்று படுத்து இருக்கும் போது, காந்தி நான் வழக்கமாக நடை பயிற்சி கொள்ளும் நேரம் இது, இதோ வந்துவிடுகிறேன் என்று புறப்படும் வேளையில் அவரது கரங்களை பிடித்தபடியே கட்தூரிபாயின் உயிர் போகிறது. எத்தணையோ முறை காந்தியும் இன்ன பிற அரசியல் போராட்டகரர்கள் எல்லாம் சிறை பிடிக்க படுகிறார்கள் பிறகு விடு படுகிறார்கள். வீடு திரும்பும் போது அவர்களது வீடும் உறவுகளும் அவர்களை வரவேற்கிறது.

ஆனால் இலங்கை போராட்டம் யாரை எதிர்த்து நடக்கிறது, காந்தி போராடிய அன்னிய ஆட்சியை எதிர்த்தா நடக்கிறது. இல்லையே சுதந்திர இலங்கை என்று அறிவித்த பிறகு, இருக்கும் கிருட்துவ மக்களை அழித்தொழித்த பின்பு, பின்னாளில் கிருட்துவனாக மாறகூடிய சாத்தியம் உள்ள தமிழர்களை குறிவைத்து தாக்கி அழிக்க துவங்குகிறது. அதன் முதல் நடவடிக்கையாக இந்த ஒரு தேச சட்டம்.

அன்றைக்கு அறவழியில் தான் போராடினார்கள் இவர்களும். என்றைக்கு எல்லாம் போராட்டம் நடத்துகிறார்களோ அன்றை எல்லாம் கலவரம் வரும். அல்லது போராட்டம் முடித்து இவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு கலவரம் அவர்களது வீட்டு பகுதிகளில் வெடிக்கும். அஞ்சா நெஞ்சர்களாக காந்தியின் அறவழி போராளிகள் செய்ததைப்போல் இவர்களும் சிறைகளை நிறப்பினார்கள்.

நல்லுடலுடன் சிறைக்கு சென்றவர்கள் அங்கம் இழந்தவர்களாக வெளியில் வந்தார்கள். சிறைக்கு சென்ற காந்தியோ அல்லது அவர் வழி சென்ற அவரது அற போராளிகள் அங்கம் குறைவாக வீடு திரும்பவில்லையே. போராட்டதில் தலையில் அடிபட்டு இறந்த கொஞ்ச மக்களை தவிற, மற்ற அனைவரும் சுதந்திரம் மலருவதை மூவர்ண்ண கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.

அப்படி நலிந்த உடலுடன் வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு வீடு இல்லை. வெறும் குட்டி சுவரும், அது விட்டு சென்ற சோகக்கதைகளும் மட்டுமே வெறுமையை கொண்டு அவர்களை வரவேற்றது.

அது மட்டுமா, அவர்களது செந்த பந்தங்கள் இறந்த இறப்பை கேட்டால் எவனாக இருந்தாலும் கோபம் வரும். அப்படி ஒரு இழிச்செயலை எந்த வித கூச்சமும் இன்றி சிங்களம் இன்றைக்கும் செய்துவருகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்கள் கட்டுக்கு அடங்காமல் போகும் போதெல்லாம் காந்தி உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று மக்களை மிரட்டி பணிய வைத்தார். ஆனால் திலீபனின் உயிர் பிரியும் வரை பார்த்துக்கொண்டு இருந்த சிங்களமோ, அவரது மறைவிற்கு பிறகு தனது கோர பற்கள் தெரிய சிரித்து காட்டியது.

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்ங்கள் ஒவ்வோன்றிலும் தனது கோரிக்கைகளை காந்தியால் வென்று வர முடிந்தது. பஞ்சு வாங்காமல் விவசாயிகளை அலையவிட்ட பிரித்தானிய அரசாங்கம் பிறகு விவசாயிகளிடம் கருணையோடு நடந்து கொள்கிறோம் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து அந்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது. இப்படி படி படியா போய் கடைசியில் 30 ஆண்டுகளில் அவர் கேட்ட சுதந்திரதையும் கொடுத்துவிட்டு சென்றது.

இன்றைக்கும் இலங்கையில் அறவழியில் போராடும் போராட்டகாரர்கள் இருக்கிறார்கள். எப்படி, அதே அரசாங்கம் நடத்தும் தேர்தல்களில் பங்கு பெற்று அரசாங்கத்தில் இடம் பெற்றும். மற்ற அமைதி நடவடிக்கைகளில் இலங்கையின் சார்பாக தமிழ் மக்களின் நிலைமைகளை அனைதுலக மக்களுக்கு எடுத்துரைக்கவும், அரசியல் முன்னேறங்களையும் பெற்று தரும் பொருட்டு செயல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் மேலே சொன்ன கோரிக்கைகளில் ஒன்றாவது அவர்களால் வெற்றி கொள்ள முடிந்ததா. அட வெற்றி எல்லாம் பெரிய வார்த்தைகள், அது பற்றி பரீசீலிகவாது பட்டதா என்றால் இல்லை. எப்போது அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் ஐ நாவின் வழிகாட்டுதல் பின் பற்ற படுகிறது என்று செல்ல மட்டுமே கூட்டம் நடந்ததாக தான் இருக்கிறதே தவிற முடிவிகளை நோக்கி என்றைகாவது பேசவேனும் முற்பட்டதுண்டா அரசு. அல்லது அரசை பேசவைக்க இந்த அறவழி போராட்டகாரர்கள் என்ன தான் செய்து இருகிறார்கள்.

பொதுவாக சொன்னால் இந்த அறவழி போராட்டகாரகளை விட தமிழர்களது சுதந்திரம் பற்றி இரனில் அதிகமாக பேசியிருக்க கூடும். அவர் வெறும் அரசியலுக்காகவாது அதை செய்தார். ஆனால் போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆயிரம் இதயங்களில் நம்பிகையை தூவி தனது அதிகார பசிக்கு தீனி போடும் இவர்களை நம்பி எப்படி மீதம் இருக்கின்ற மக்கள் அறவழியில் போராட வருவார்கள்.

கிட்டத்தட்ட ஒரு 40 ஆண்டுகாலம் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் ஏதாவது ஒரு தீர்வையாவது சிங்களம் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. போராட்டத்தை அடக்கு முறை கொண்டு அழிக்க மட்டுமே அரசு முயல்கிறது. சிங்களம் சொல்லும் தீர்வு எல்லாம், தலை இருந்தால் தானே தலைவலி. தலையே இல்லை என்றால் தலைவலி எப்படி வரும் என்று. வாதத்திற்கு கூட ஒத்து வராத ஒரு முடிவை எட்ட சிங்களம் நினைக்கவும் செயல்படுத்தவும் போது மக்கள் எங்கே ஐயா அறவழியில் போராடுவது.

30 ஆண்டு காலம் அறவழியில் போராடிய காந்தியை பிரிதானிய அரசாங்கம் கொல்ல நினைக்க கூட இல்லை. ஆனால் கையால் ஆகாத இனவாதம் அவரது உயிரை 3 தோட்டாக்கள் கொண்டு பிரித்ததை அனைவரும் அறிவோம். பிரித்தானியர்கள் நினைத்து இருந்தால் இதை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி காந்தி என்று ஒருவர் இருந்தார் என்றே இல்லாமல் செய்திருக்க முடியுமே. ஆனால் பிரித்தானியர்கள் சட்டத்திற்கு கட்டு பட்டு, அதை மீறி எதுவும் செய்யவில்லை. ஆனால் சிங்களமோ, அவர்களது சட்டம் என்ன ஐ நாவின் சட்டத்தை கூட மலிவாக மீறுகிறது. அரசாங்கம் என்ற பெயரில் ஒரு வன்முறை கும்பல் மன நோயாளியாக தமிழர்களை கொன்று குவிக்கின்றது. நீங்கள் அந்த மன நோயாளியிடம் கழுத்தை காட்டுங்கள் என்று சொல்கிறீர்கள், ஏன் அது உங்களது கழுத்து இல்லை அதனாலா.................................

கண்விழித்து கொள்ளுங்கள் நண்பர்களே, கனவு காண்பதை விடுத்து கள நிலைமைகளை நோக்குங்கள் உண்மை விளங்கும்.

11 comments:

Anonymous said...

* Sri Lanka Army to hand over bodies of six female Tigers to ICRC
Monday, November 12, 2007, 5:42 GMT, ColomboPage News Desk, Sri Lanka.

Nov 12, Colombo: Sri Lanka military sources said that bodies of six female LTTE cadres killed in a confrontation this morning at the forward defence line in Periyathampanai in Wanni would be handed over to the International Committee of the Red Cross (ICRC).

Troops overran and destroyed an LTTE bunker this morning during a confrontation with the Tigers along the FDL as they attempted to infiltrate it. During the subsequent search troops found six bodies of female LTTE cadres in the area. One soldier was also killed in the incident.

The bodies have been taken to the Government Hospital in Vavuniya. Defense sources said that bodies would be handed over to LTTE through ICRC.

Meanwhile the elite Special Task Force troops confronted another group of Tigers inside the jungles of Pothuvil yesterday evening killing three Tigers.

The three bodies are presently lying at the Pothuvil government hospital. Police investigations are in progress, defense sources said.

Anonymous said...

Sri Lankan Military Says 30 Rebels Killed in Fighting (Update1)

By Paul Tighe

Nov. 12 (Bloomberg) -- Sri Lankan army units killed more than 30 members of the Liberation Tigers of Tamil Eelam in fighting in the past two days as the military targets rebel- held areas in the north of the South Asian island nation.

At least 20 rebels were killed in clashes along the line dividing army and LTTE forces near Vavuniya and more than 10 died in fighting in the Mannar region, the Ministry of Defense said on its Web site. One army officer was killed and five soldiers wounded, it said.

``During the clashes that continued from morning to evening, troops were able to hold down the enemy advance effectively,'' the Ministry said in a report on the Vavuniya fighting. The LTTE hasn't commented.

Sri Lanka's army has stepped up its offensive against LTTE- held areas in the northern region, the last area held by the Tamil Tigers after they lost control of the east to the army in July. The LTTE has demonstrated it will never surrender and the government has ``no alternative but to completely eradicate terrorism,'' President Mahinda Rajapaksa said last week.

The rebels say any peace agreement must be based on a separate homeland. Tamils made up 11.9 percent of the population in 2001, the government's Census and Statistics Department said. Sinhalese made up almost 74 percent of Sri Lanka's 20 million people.

The government has rejected a settlement that divides the country and is offering to devolve power to some provinces.

Negotiated Settlement

Sri Lanka's conflict should be resolved through a negotiated settlement that includes a ``credible devolution of powers,'' Indian Finance Minister Palaniappan Chidambaram said in a speech yesterday in the Sri Lankan capital, Colombo.

``Neither side can finally prevail over the other through conflict,'' he said. ``Senseless acts of terror on the one side or planned operations by the armed forces on the other side will only result in more death and destruction.''

India is committed to the unity and territorial integrity of Sri Lanka, Chidambaram said, according to a text of his speech issued by the Indian High Commission in Colombo.

S.P. Thamilchelvan, the head of the LTTE's political wing, was killed Nov. 2 in an air raid near the group's headquarters at Kilinochchi in the north. The rebels' last weapons-smuggling vessel was destroyed a month ago and the commander of the so- called Sea Tigers naval unit was killed Sept. 27.

Thousands of residents of Kilinochchi attended the funeral two days ago of Major Selvan, who died Nov. 9 after being wounded in the raid that killed Thamilchelvan, TamilNet reported on its Web site yesterday. Five other leaders died in the attack.

Norway Criticized

The LTTE has criticized peace negotiator Norway for failing to denounce Thamilchelvan's killing, saying the head of its political wing wasn't a military target. Sri Lanka's government has said Thamilchelvan's death won't harm the peace process because he led LTTE efforts to obstruct negotiations.

Norway brokered a 2002 cease-fire between the government and the LTTE that collapsed when fighting intensified as two attempts at peace talks in Geneva failed last year. Norway heads the team of international monitors overseeing the truce.

The 24-year-long conflict has resulted in the deaths of more than 70,000 people.

Sri Lanka needs to keep defense spending at 3.5 percent of gross domestic product and find a ``lasting solution'' to the conflict with Tamil rebels, Rajapaksa said in his budget address to Parliament last week.

To contact the reporter on this story: Paul Tighe in Sydney at ptighe@bloomberg.net

')) said...

எனது பதிவிலே குறிப்பிட்டது போல் இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை பத்திரிக்கை நண்பர் ஒருவர் சிட்னியில் இருந்து தருவதாக ஒரு பின்னூட்டம். உங்கள் பொய்யுரைக்கு ஒரு அளவே இல்லையா....

')) said...

பதிவுக்கு நன்றி சகோதரி

')) said...

வாங்க கானா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்ன பதிவிடுவதையோ ஆதரவாக பேசுவதையோ தவிற வேறு எதையும் செய்ய முடியவில்லையே. அவமானமாக இருக்கிறது.

Anonymous said...

பனிமலர் உங்கள் ஆதங்கம் உண்மையானது தான்... என்ன சொல்வதென்றே தெரியவில்லை...! விரைவில் இந்த நிலை மாரும் என்று நம்புவோம்.

')) said...

வாங்க வள்ளி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஈழத்தவர்களது பதிவுகளை, கேள்விகளை படிக்கும் போது என்ன உரைப்பது என்றே தெரியவில்லை. நல்லதே நடக்கும்.....

')) said...

காந்திய வழியில் பல ஆண்டுகள் போராடியவர்கள் தான்.பல ஒப்பந்தங்கள் மை காய்வதற்கு முன்னேயே புத்த பிக்குகளால் கிழித்தெரியப்பட்டன்!
பெரிய காந்திய வாதியான மிக்க மரியாதைக்குரிய செல்வநாயகம் அவர்கள் பாராளுமன்றத்தின் முன்னேயே சிங்களக் காவலர்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அம்மணமாக ஓட விடப் பட்டார்.பின்னர் அவரே தனியீழமே வழியென்று சொன்னார்.

நட்ந்தவற்றையும்,நடப்பவற்றையும் தெரிந்து கொண்டு பேசினால் நல்லது.
ஆங்கிலேயர் மனசாட்சிக்குப் பயந்தார்கள்.சிங்கள வெறியாளர்கட்கும்
மனசாட்சி இருந்திருந்தால் என்றோ அமைதி வந்திருக்கும்.

')) said...

வாங்க தமிழன், அதையேத்தான் நானும் சொன்னேன். வருகைக்கும் கருத்துகும் நன்றி.

')) said...

British Troops killed common people..British abused and humiliated Gandhi..but
Gandhi didn't blast land mines..can you say that is the case in srilanka???
violence is double edges sward...
tamils also took it and not getting heavily injured....
understood????????

')) said...

உங்களது மொழியில் தமிழர்கள் அடி வாங்கியே மரிக்கனும் போல. சாலிய்யன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு அப்படி எந்த ஒரு மாபடுகொலையும் நிகழவில்லை. திட்டமிட்டு போராடுபவரை அடக்கும் விதமாக மாபடுகொலைகளை நிகழ்த்தவில்லையே. ஆங்காகே தடியடி மற்றும் சிறைவாசமும் மட்டுமே மேற்கொண்டதே ஏன். அவர்களுக்கு போராடுவது ஒரு தவறு தான் ஆனால் சிங்களம் போல் வஞ்சிகப்படவேண்டிய ஒன்று அல்ல.