Tuesday, June 13, 2017

அன்புமணி கேட்டிருக்கும் ஞாயமான கேள்வி முடிந்தால் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்

அதிமுக இத்தனை கோடி திமுக இத்தனை கோடி என்று ஆதாரங்களுடன் கேள்வி கேட்டுள்ளார் அன்புமணி. எவ்வளவு அற்புதமான கேள்விகள் அவைகள். இத்தனை கோடிகளை இறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொள்ளை அடித்து இருப்பார்கள் பாவிகள் அவர்கள்.

மாறி மாறி அட்சியிலும் மறைமுகமான ஒப்பந்தகளினாலும் எவ்வளவு கொள்ளை இந்த 50 ஆண்டுகாலத்தில் திராவிட கட்சிகளால் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கும் என்றும் கேட்டுள்ளார். எவ்வளவு ஞாயமான கேள்விகள் இவைகள் முடிந்தால் திமுகவும் அதிமுகவும் பதில் சொல்ல கடமைபட்டவர்கள்.

சரி நாம் அன்புமணியை கேட்போம், 50 ஆண்டுகள் பாமக ஆட்சியில் இல்லை வெறும் 4 ஆண்டுகாலம் ஒரே ஒரு அமைச்சர் பதவி. அந்த பதவியிலேயே எவ்வளவு பணம் அடித்து இருந்தால் சென்ற தேர்தலில் பாமக இவ்வளவு பணத்தை அள்ளி இறைத்து இருக்கும்.

நாட்டில் ஏழைகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய 4 அரசு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை தரம் சரியாக இல்லை என்று சொன்னதோடு நில்லாமல் அவைகளை மூடி வெளி நாட்டு நிறுவனங்களிடம் ஒன்றுக்கு 10ஆக காசு கொடுத்து ஏழை மக்கள் மட்டும் அல்ல. அவர்களுக்காக அரசும் அந்த வெளி நாட்டு நிறுவனங்களிடம் மட்டுமே மருந்து வாங்க வைத்த இந்த சிகாமணி ஊழழை பற்றி சங்கூதுகிறார்.

சென்றமுறை தந்தி தொகாவிற்கு அளித்த பேட்டியில் சென்னையில் புதிதாக மருந்தாலை வர வழி செய்தோம் என்றார் ஆனால் இன்று வரை எங்கே வருகின்றது என்றும் கூட இது வரை ஒருவரும் சொல்லவில்லை.

இந்த சிகாமணியின் பேச்சை நம்பி இவரை முதல்வராக அல்ல உலக தலைவராக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் இவர் கொள்ளை அடித்து அதில் சொகுசாக இவர் மேடை ஏறி மாற்றம் முன்னேற்றம் என்று மக்களிடம் முழங்குவார்.

0 comments: