Tuesday, June 27, 2017

கூடங்குளத்தின் உண்மை நிலை என்ன ஆள்ளாளுக்கு குழப்புராங்களே

நன்கு தெரிந்த ஒரு நண்பரின் மூலம் கூடங்குளத்தில் நடக்கும் நடப்புகளை அழகாகவும் அறிவியல் பூர்வமாகவும் அழக்காக விளக்கினார்.

அதுவும் அதிகம் புரளி பேசப்பட்ட குளிரூட்ட எடுத்து மீண்டும் கடலுக்குள் விடும் நீரை பற்றிதான் அதிகம் பொங்கி எழுந்தார்கள். இவர் சொல்வது போல் உள்ளே இழுக்கப்படும் தண்ணீர்ன் அளவும் திரும்ப வெளியில் விடப்படும் நீரின் வெப்பமும் நேரெதிராக இருக்கும் என்றும், வெப்பம் 5 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்கும் வண்ணம் அதிக அளவு நீர் புழக்கத்தில் வைத்துள்ளார்கள் என்றும் விளக்கினார்.

அதுவும் 3 சுழற்சி முறையில் தண்ணீர் தனித்தனியாக பயன்படுத்தபடுவதையும் விளக்கினார். அணு கொதிப்புக்கு இருக்கும் கன நீர், அதை கொண்டு சூடேற்றப்பட்ட அடுத்த பயன்பாட்டு நீர் மற்றும் இந்த இரண்டு நீரையும் குளிரூட்ட நீர் என்ற 3 வகையையும் விளக்கினார்.

பயன்படுத்திய கதிரியக்க பொருட்களை அந்த கூடத்தின் மற்ற ஒரு சேமிப்பு பகுதியில் சேர்த்து வைத்து கதிரியக்கம் குறையும் வரையும் அப்படியே தோரிய செறிவூட்டலும் நடக்கின்றதும் என்று விளக்கினார்.

ஒரு வேளை அணு உலை வெடித்தால் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி நடப்பின் அணு உலையின் உள் நீர்புகும் உள்ளிருந்து எதுவும் வெளியேறா வண்ணம் அமைப்புகள் வடிவமைக்கப்பட்ட அணு உலை இது என்று விளக்கினார்.

 நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய்க்கு மின்சாரம் தயாரிக்கிறது இந்த அணு உலை என்றும். அடுத்த 39 வருடங்களுக்கு இது பயன்பாட்டில் இருக்கும் என்று விளக்கினார்.

பின்னர் ஏன் இவ்வளவு போராட்டம் என்ற கேள்விக்கு சுருக்கமாக நாம் ருஷ்யாவிடம் இருந்து அணு பொருட்களையோ நுட்பத்தையோ வாங்குவது மேற்கு நாடுகளுக்கு பிடிக்கவில்லை ஆகவே அவர்களது அரசு சாரா அமைப்புகளை பயன்படுத்தி மக்களுக்கு தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் விளக்கினார்.......

யாரை நம்புவது.........

1 comments:

')) said...

வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் வந்தபின் மக்களின் குழப்பம் தீரவில்லை. மாறாக குழப்பம் அதிகமாதான் ஆகியிருக்கு. எல்லா விசயத்திலும்....