Tuesday, June 20, 2017

மோடிக்கும் குருமூர்த்திக்கும் கிரிக்கெட்டு சூதாட்டத்தின் பொருளாதாரம் தெரியாமல் போனது ஏனோ

மூச்சுக்கு மூச்சு கள்ளப்பணம், கள்ள சந்தை, கள்ளத்தனமாக பசு சானி விற்கிறார்கள் என்று பேசும் பிரிவினைவாத பாசக அரசின் பிரிவினைவாதிகளான மோடியும் சரி அவரின் தமிழக அடிவருடி குருமூர்த்தியும் சரி, பண மதிபிழப்பு பற்றி பேசிய உடனேயே கள்ளப்பணம், கள்ள சந்தை, கள்ளத்தனமாக பசு சானி விற்கிறார்கள் என்று வாய்கிழிய பேசினார்கள்.

சென்ற வாரம் நடந்த கிரிகெட்டு ஆட்டத்தில் பொதுவாக பாக்கிட்தானத்து வீரர்களின் மீது உள்ள அபரிவிதமான நம்பிக்கையில் பாக்கிட்தானத்து அணியின் சார்பில் பணம்கட்டி தோற்பார்கள். ஆனால் இந்த மாட்டுகறி பிரிவினைவாத அரசு பதவி ஏற்றததில் இருந்து இந்திய கிரிகெட்டு அணியை ஆதரிக்காவிட்டால் தேசதுரோகி என்று ஆரம்பித்து. கடைசியில் கிரிகெட்டு சூதாட்டத்தில் இந்திய அணியின் சார்ப்பில் சூதாடாவிட்டால் தேச துரோகியாக ஆகிவிடுவோம் என்ற பதற்றமும். எப்படியும் கெளித்துவிடுவார்கள் ஒன்றுக்கு 10 என்று பணம் வரும் என்று இரகசியமாக இந்த லலித்து மோடி வகையராக்கள் பரப்பிய வதந்தியின் சூழ்ச்சியில் விட்டில் பூச்சிக்களாய் மாட்டி பணத்தை இழந்தவர்களை பார்த்து பாவபடுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்.

தனது ஊரில் கடை வைத்து இருக்கும் அண்ணாச்சியை பார்த்து பொறாமை கொள்ள பழக்கியவர்கள் தானே இந்த பிரிவினைவாத அரசு. அவர்களின் மோடிவித்தையிலே மயங்கி அதோபார் மாட்டுகறி, பசு கன்று, இதோ பார் பசு மூத்திரம்........என்று இன்றைக்கு இதோ பார் தலித் தலைவர் என்று அம்மா சின்னஞ்சிறு குழந்தையை ஏமாற்றும் அதே தாத்தா காலத்து நுட்பத்தை பயன்படுத்தி மிட்டாளாக்குகின்றது.

இந்த பிரிவினைவாத அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகளில் எப்போதானும் மோடியும் சரி, குருமூர்த்தியும் சரி கிரிகெட்டு சூதாட்டதை பற்றி பேசியோ எழுதியோ பார்த்து கேட்டு இருக்கிறீர்களா.

சாதாரண கூலி தொழிளாலியின் வருமானம் என்ன அதை ஆசைகாட்டி வங்கில் போட வைத்துவிட்டு பிறகு எடுக்க முடியாது என்று ஏமாற்ற பட்டம் வாங்கிய இந்த பிரிவினைவாத அரசுக்கு, இந்த கிரிக்கெட்டு சூதாட்டமும் அதில் கொழிக்கும் பணமும் அதை முடக்கும் எண்ணம் கூட இல்லாமல் போனதன் மர்மம் என்ன என்று பார்த்தால் தான் ஏன் என்று விளங்கும்.

லலித் மோடி என்ற ஒரு கிரிக்கெட்டு சூதாட்டகாரர் நாட்டைவிட்டு ஓடிப்போய் இங்கிலாந்து மொரீசியசு என்று தேடப்படும் குற்றவாளிகள் பொதுவாக தஞ்சம் புகும் நாடுகளில் பதுங்கி மிகவும் சிரமப்பட்டு ஏதோ அவறால் முடிந்த ஒரு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். அந்த கிரிக்கெட்டு சூதாட்டகாரரின் சூதாட்ட பணம் பற்றிய பேச்சே இல்லை, சிதம்பரமும் கார்த்திக் சிதம்பரம் என்று குருமூர்த்தி முதல் உளவாளி சுப்பிரமணி சாமி வரை வாய்கிழிய பேசுகின்றதுகள்.

ஏன் இந்த கிரிக்கெட்டு சூதாட்டம் இந்திய பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் போற்றி வளர்க்கின்றதா. இல்லை நாட்டின் பாதுகாப்பிற்கும் நாட்டின் முன்னேற்றதிற்கு இந்த பொருளாதாரம் பயன்படுத்தபடுகின்றதா.......

வாரக்கடைசியானம் கேளிக்கை விடுதிகளில் குடித்துவிட்டு அந்த வெட்டாட்ட இசைக்கு குத்தாட்டம் போடுவது தான் பண்பு இயல்பு என்று பரப்புரைத்து, குறைந்தது டாசுமார்க் கடையிலாவது குடித்துவிட்டு சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் என்று கூத்தடிக்க கற்றுக்கொடுத்து பணத்தை பிடுங்கியதை போல இப்போது கிரிக்கெட்டு சூதாட்டம். இதிலே ஐபில் என்று ஒரு 90 ஆட்டம் விதவிதமாக அலைபேசி கட்டணங்கள் திட்டங்களை போல் அழகு அழகு பெயர்களில் சொலிக்கின்றது.

இதோ இப்போது சனிக்கிழமை வரையில் வந்த செய்தி 2000 கோடி சூதாட்டம் கட்டியாகிவிட்டது என்று. மேலும் ஆட்டம் ஆரம்பித்ததும் ஒவ்வொறு பந்து என்று எவ்வளவோ விதமாக சூதாட்டங்கள் அரங்கேறி இருக்கிறது பல்லாயிரம் கோடியில். எங்கே அதை எல்லாம் கேட்டுவிடுவார்களோ என்று அவசர அவசரமாக அசையா சொத்துகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சொத்துகளை பரிமுதல் செய்து பாசகவின் ஏழைகளுக்கு கொடுத்துவிடுவோம் என்றும். ஆதார் எண்கள் இல்லாத சொத்துகள் பினாமி சொத்துகள் என்று அறிவிக்கப்பட்டு பரிமுதல் செய்து பாசகவின் ஏழைகளான அம்பாணி அதாணியின் பினாமிகளுக்கு எழுதி வைக்கப்படும் உங்கள் செலவில் என்று எகத்தாளம் போட்டுள்ளார்கள் பிரிவினைவாத பாசக அரசு.

இந்த சூன் 30க்கும் ஆதார் எண்ணுடன் இணைக்காத வங்கிகணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் அம்பாணியின் 45,000 கோடி கடனை கட்டுவதற்கு என்று அம்பாணியின் நிதி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் வசூலிக்க ஆரம்பித்துவிட்ட சூழலில் ஆதார் எண்ணை காரணம் காட்டி சாதாரண மக்களின் சொத்துக்களை சூறையாடி அழித்து அம்பாணியின் கடனை அடைக்க சாதார்ண் சென் துக் யோசனாவை பாசகவின் ஆயோக்கியர்கள் கிளப்பியுள்ளார்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

0 comments: