Wednesday, June 21, 2017

விவசாயக் கடன் தள்ளுபடியும் தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூலும்

தேசிய நெடுஞ்சாலையில் செல்ல  உகயோகிப்பாளர் கட்டணம் கட்டனுமாம், இல்லை என்றால் அந்த சாலைகளில் நீங்கள் செல்லமுடியாதாம்.

அந்த தேசிய நெடுஞ்சாலை உங்கள் ஊரில் கட்டும் போது உங்கள் வீடு, வயல், வீட்டு மனை என்று எது அந்த பக்கம் வந்தாலும் அதை தேசிய நில ஏடுத்துக்கொள்ளும் சட்டத்தின் மூலம் அரசு பெற்றுக்கொள்ளுமாம் என்று எடுத்துகொண்டு அமைக்கப்பட்ட சாலையில் இன்றைக்கு நீ செல்ல எந்த வண்டியில் செல்கிறாய் என்று பார்த்து அதற்கு தகுந்தாற் போல் கட்டணம் கட்டவேண்டுமாம்.

எல்லா தேசத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை. அதற்கு தான் வரி வசூலிக்கிறார்கள். அதாவது தேசிய தரமான நெடுஞ்சாலைகளை அமைத்துக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும் இந்த கட்டணம் வசூலிக்கும் சாலைகளை அமைக்க நீங்களும் நானும் ஏற்கனவே வரியை செலுத்திவிட்டோம். அப்படி வரி செலுத்திய பிறகும் ஒவ்வொறு முறை செல்லும் போதும் எதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும்.

கேட்டால் வெளிநாடுகளில் அப்படி தான் அதே போல் நீயும் கட்டு என்று இந்த பிரிவினைவாத அரசு சொல்லும்.

வெளிநாடுகளில் மக்களின் தேவைக்காக என்று தரமான சாலைகள் இருக்கும், அதே வேளையில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த கட்டண வழி சாலைகளை அறிமுகப்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் எந்த ஒரு சாலைக்கட்டணமும் இல்லாமல் சுற்றி வரமுடியும். அதற்காக குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம் என்ற சாலைகள் அல்ல. கட்டணம் கட்டி செல்லும் அதே தரத்தில் அமைந்த உங்களுக்காக அரசு உங்கள் வரிப்பணத்தில் கட்டிய சாலை.

என்ன ஆச்சர்யம் என்றால் எதிர்கட்சிகள் கூட இந்த விசயத்தில் வாய்திறக்காமல் இருப்பது தான்.

உங்கள் ஊரில் உங்களின் மண்ணில் அமைக்கப்பட்ட சாலைக்கு எதற்கு நீங்கள் மைய அரசுக்கு நேரடியாக பணம் கொடுக்க வேண்டும். அந்த பணம் மாநில அரசிடம் எவ்வளவு பங்கிடப்படுகின்றது.

நீங்கள் எல்லாம் எனது சாலை எங்கே என்று ஓங்கி கேட்கும் வரை வடிவேலின் கிணறு கானாம போச்சே பாணியில் தான் வசூலிப்பார்கள் இந்த பிரிவினைவாத பாசக அரசு.

தமிழகத்தில் இருந்து மைய அரசுக்கு செல்லும் ஒவ்வொரு காசிலும் விவசாய வரியை தமிழக அரசு வசூலிக்க வேண்டும். எந்தெந்த பணிகளால் தமிழகத்தின் விவசாயம் பாதிக்கபடுகின்றதோ அந்தந்த தொழில்களில் வசூலாகும் மைய அரசு வரியில் 99% விவசாய வரியாக தமிழகம் பிடிக்க வேண்டும். மேலும் அந்த பணியினால் பெறப்படும் இலாபங்களில் 90% விவசாய வரியாக்கி. அந்த பணத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாமே நிவாரணம் தரலாம் அருண் செட்லி சொல்வது போல்.

 நெய்வேலி சுரங்கத்தினால் தென்னாற்காடு மாவட்ட விவசாயம் சுடுகாடாய் போனது. தென்னாற்காடின் நிலத்தடி நீரை சுரங்கம் என்ற பெயரில் நொடிக்கு ஆயிரம் ஆயிரம் கனாடி நீரை வீனாக கடலுக்கு அனுப்புகிறது அந்த நிறுவனம். விருதாசலத்தில் தொடங்கும் அந்த மண்குவியல் கடலூர் குள்ளஞ்சாவடி வரையில் நீளுகின்றது. கிட்டத்தட்ட 40, 50 கிலோ மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்டி எடுத்துள்ளார்கள். அப்போ இது வரையில் எவ்வளவு நீர் வெளியேற்றப்பட்டு இருக்கும்.

அப்போது எல்லாம் தென்னாற்காடு மாவட்டத்திலும் தஞ்சை மாவட்டத்திலும் ஏன் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் பேருந்துகள் வளைந்து நெளிந்து அந்த பச்சை பசேர் நிலங்களின் ஊடே சென்ற காட்சிகள் எல்லாம் இன்றைக்கு கனவில் பார்த்தது போல் இருக்கின்றது.

தேசிய வளர்சி என்ற பெயரால் மாநிலங்களின் வளங்களை கொள்ளையடிப்பதை நிறுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அதே வேளையில் இப்படி விவசாய வரி விதிப்பதனால் மைய அரசு இந்த சுரண்டல் வணிபங்களை விட்டுவிட்டு வேறு உருப்படியான வேலைகளை செய்யும்.

கர்னாடகா மாநில மின்சார தேவைக்கு நெய்வேலியும் தென்னாற்காடும் ஏன் பாலைவனமாக வேண்டும். அவர்களுக்கு நெய்வேலியும் தென்னாற்காடும் வேண்டும் என்றால் இங்கு வந்து வாழ சொல்லுங்கள். உங்களின் வாழ்வாதாரங்களை உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஆள் எதற்கு அவர்களது சொகுசு வாழ்கை வாழ கொள்ளையடிக்க நீங்கள் சம்மதிக்க/கட்டாயப்படுத்தபட வேண்டும்.

விவசாய வளங்களை அழிக்கும் திட்டங்களை நிறுத்தி, இனிமேலும் அது போல் எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. நீங்கள் கேள்வி கேட்கும் வரை அருண் செட்லி உங்களது வரிப்பணத்தை அவர்களது பினாமி நாடுகளான மொரீசியசு, ஊகாண்டா, ஆப்ரிகா என்று அள்ளி கொடுத்துவிட்டு உங்களின் ஊரில் உங்களின் வரிப்பணத்தில் கட்டிய நெடுஞ்சாயில் செல்ல உங்களிடமே கட்டணம் கேட்ப்பான்.

வெளிநாடுகளுக்கு கொடுக்கும் நிதியுதவிகளை இந்தியாவின் விவசாயிகளுக்கு கொடுங்கள், உங்களால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு போக மீதி இருக்கும் வரிப்பணத்தை எடுத்து நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும் சீரமைக்கவும் கொடுங்கள். பிறகு மிஞ்சி இருந்தால் அம்பாணிக்கும் அதாணிக்கும் வெளிநாடுகளுக்கு உதவி என்ற பெயரில் கொடுக்கலாம்.

0 comments: