Thursday, June 22, 2017

பல் இளித்த பிரிவினைவாத பாசகவின் யோகா தின கொண்டாட்டங்கள்

அதோ பார் பசு மாடு, இதோ பார் பசு மாட்டுமறி, அங்கே பார் பசு மாட்டு சானி, இல்லை மூதிரம் என்று படம் காட்டும் பிரிவினைவாத பாசகவின் பகல் காட்சி படம் இந்த யோகா.

சென்ற ஆண்டு கிட்ட தட்ட அனைத்து மா நிலங்களிலும் உள்ள கிராமங்கள் தவிர்த்து நகர் முதல் மெட்ரோ சிட்டிகள் வரை வகை வகையாக யோக செய்யும் விரிப்புகளை வாங்கி குவித்து. வெள்ளை ஆடைகளை அணிந்து மக்கள் உருண்டும் பிரண்டும் அழகு காண்பித்தார்கள்.

ஆனால் இந்த ஆண்டோ யோக யோக என்ற்கு கூவு கூவு என்று கூட்டிய கூட்டங்களில் கோவில்களில் சுண்டல் வாங்கும் அளவிற்குக்கூட கூட்டம் வரவில்லை.

தொகாவிலும் கூட திரும்ப திரும்ப மோடி விழுந்து எந்திரிக்கும் காட்சியை மட்டும் வெட்டி ஒட்டி நிமிடத்திற்கு 100 முறை ஓட்டிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு பக்கம் மாற்றம் முன்னேற்றம் என்று சொல்ல வேண்டியது மறுபக்கம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கொலை செய்ய வேண்டியது இது பிரிவினைவாத பாசகவின் வாடிக்கையாக ஆகிப்போனது. கேட்டால் மறுபடியும் சானி மூத்திரம் என்று ஆரம்பிக்க வேண்டியது.

இந்த பிரிவினைவாத அரசியலை கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள் அதன் விளைவு இந்த ஆண்டு யோக தினத்தில் வெறும் பிரிவினைவாத பாசகவின் உறுப்பினர்கள் மட்டும் பங்கெடுத்தார்கள். ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் மிரட்டப்பட்டதும், இராணுவம், காவல் துறை என்று மிரட்டலுக்கு உட்பட்ட இடங்கள் தவிர்த்து பொது மக்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்சிகளை எந்த தொகாவும் ஒளிபரப்பவில்லை.

இந்தியாவிலே இப்படி பல் இளிக்குதே இது வெளி நாடுகளில் எப்படி இருக்கும், அன்னையர் தின முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை என்றது தான் உண்மை. அங்கே யோகா செய்பவன் இந்த மோடி வருவதற்கு முன்பிருந்தே செய்துக்கொண்டு இருப்பவன். அவனை வைத்து மோடி விமானம் ஏறி விற்று வந்த பிறகு தான் உலகிற்கே யோகா என்றால் என்ன என்று தெரியும் என்ற ஏகவசனம் எல்லாம் எங்களிடம் வேண்டாம் அப்பன்களா......எப்படி இருந்த யோகா தினம் சென்ற ஆண்டு இந்த ஆண்டு அந்த விசயகாந்து கூட நோம்பு கஞ்சு குடிச்சதத்தான் காட்டினார்களே தவிர படுத்து உருண்டதாகக்கூட காட்டவில்லை......

0 comments: