Monday, June 12, 2017

செர்மனியில் இருந்து படிப்பறிவே இல்லாத இந்திகாரர் எதற்கு சென்னைக்கு வருகிறார்கள்

முன்பெல்லாம் சரியாக சொல்லவேண்டும் என்றால் இந்த பிரிவினைவாத கட்சி பாசக ஆட்சிக்கு வரும் முன் செர்மனியில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அறிவிப்புகள் செர்மன் ஆங்கிலம் மற்றும் அழகு தமிழில் அறிவிப்புகள் சொல்வார்கள்.

ஆனால் இந்த பிரிவினைவாத அரசு வந்ததும் வராததுமாக வெளி நாட்டுவாழ் தமிழர்களின் தலையில் கைவைப்பதில் இருந்து தான் துவங்கி இருக்கிறார்கள்.

வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரங்களில் வருபவர்களிடம் அடாவடியாக இந்தியில் தான் பேசுவார்கள் இந்த பிரிவினைவாத அரசு நியமித்த தூதரக மக்கள். இந்தில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தமிழில் சரியான பதிலை சொல்ல அதை புரிந்துக்கொண்டு பிறகு ஆங்கிலத்திற்கு மாறிய அந்த வெறியர்கள் துவக்கதிலேயே ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம் ஆனால் அவமானபட்டான்டா தூதரகன் என்றாகிப்போனது.

இதோ இப்போ செர்மனியில் இருந்து இந்தியா வரும் விமானத்தில் எழுத்தறிவும் படிப்பறிவும் இல்லாத இந்தி பேசும் மக்கள் அமெரிக்கா ஐரோப் யூனியன்  கண்டங்களை சுற்றி பார்த்துவிட்டும் அல்லது அங்கேயே தங்கி இந்தியில் பேசியும் எழுதியும் வேலை பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பும் போது அந்த களைப்பில் அறிவிக்கும் ஆங்கிலம் கேட்ட காதில் ஈயத்தை காய்ச்சு ஊற்றியதை போல் இருப்பதால் இனி இந்தியில் சொல்ல சொல்லி சொல்லுங்கள் என்று வெளியுரவு அமைச்சகத்திடம் விளித்தாகவும் அதன் பால் இனி தமிழில் அறிவிக்க வேண்டாம் இந்தியில் மட்டுமே சொல்லுங்கள் என்று பிரிவினைவாத அரசு கேட்டுக் கொண்டதாகவும் அறிகின்றோம்.

வெளி நாட்டுவாழ் இந்தியர்கள் இந்திய பணம் வைத்து இருந்தால் சட்டவிரோதம் கோவிலில் போடச்சொல்லும் மடையர்களே அவர்களுக்கு அவர்கள் செய்யும் செலவிற்கு அந்த நாடுகள் செய்யும் சலுகைகளில் ஓசியில் வந்து வாங்கி திங்க வெட்கமாய் இல்லை.

தமிழர்களிடம் இந்த பிரிவினைவாத அரசு இன்னும் எவ்வளவு தான் பிச்சை எடுக்கும் என்று தெரியவில்லை. இந்த வெளி நாட்டுவாழ் தமிழர்களும் இளிச்சவாயர்களாய் இன்னும் எவ்வளவு தான் அவர்களுக்கு பிச்சை இடுவார்கள் என்றும் தெரியவில்லை.

இந்த எழுதபடிக்க தெரியாத இந்திக்காரர்கள் அப்படி வெளி நாட்டில் என்ன தான் வேலை இருந்து இருக்கும் கற்பனை செய்து பாருங்களேன். இந்தியாவாக இருந்திருந்தால் கன்னியாகுமாரிக்கு சாமி கும்பிட போனேன் ராமர் கட்டிய தொங்கு பாலத்தை பார்க்க வந்தேன் சொல்லுவா. அமெரிக்காவிலும் ஆப்பிர்க்காவிலும் ஐரோப் யூனியனிலும் என்ன செய்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று தான் புரியவில்லை.

ஒரு வேளை இது காங்கிரசு ஆட்சியின் சதி என்று பிரிவினைவாத தலைவர்களான எச்சி ராசாவும் தமிழிசை சௌந்தர்ராசனும் சொல்லுவார்கள். ஆங்கிலமும் தமிழும் தெரியாத இந்தி ஓட்டுனர்கள் தமிழகம் வந்தால் படிக வசதியாக தமிழக மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தியில் எழுதி பெருமைபட்டவர்கள் இல்லையா இந்த பிரிவினைவாத தலைவர்கள். இந்த முறை இந்தி மட்டுமே எழுதபடிக்க தெரிந்த வெளி நாட்டுவாழ் இந்தியர்கள் சென்னைக்கு வரும் போது சென்னை விமான நிலையத்தில் தவறுதலாக இறங்காமல் திரும்பவும் வந்த நாட்டுக்கே சென்றுவிட்டால் என்ன ஆகும் என்ற பெருந்தன்மையால் இந்தியில் அறிவிக்க சொல்லி இந்த பிரிவினைவாத அரசை சொல்ல சொன்னோம் என்று பெருமையாக சொல்வதை காட்சி ஊடகங்களில் பார்க்கனுமே......

0 comments: