Tuesday, June 13, 2017

மல்லையா, அதாணி, அம்பாணி வாராகடனுக்கு மைய அரசு எந்த நிதியில் இருந்து பணம் வழங்கியது

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்ற கணக்காக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் நிதியை மா நில அரசே திரட்டவேண்டுமாம் பிரிவினைவாத அரசு அருண் செட்லி நக்கலாக சொல்லி சிரிக்கின்றார்.

முன்னமே தெரிவித்தபடி மைய அரசு விதிக்கப்போகும் GST வரியில் 90% முதல் 100% வரை மா நிலங்கள் விவசாய வரியை அறிவிக்க வேண்டும்.

எந்த எந்த சேவைகளினால் உழவும் உழவு சார்ந்த தொழில்களும் பாதிக்கபடுகின்றதோ அந்த தொழில்களுக்கு எல்லாம் GST வரியில் மட்டும் அல்ல அந்த தொழில் கிடைக்கும் இலாபத்திலும் 50% வரியாக மாநிலங்கள் பெற சட்ட வழிகளை கொண்டு வரவேண்டும்.

 நாட்டின் வளர்ச்சி என்று ஒருபுரம் மா நிலங்களின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க மைய அரசு ஆட்களை பணிப்பதும். அந்த ஆட்கள் உழவும் உழவு சார்ந்த தொழில்களை அழிக்கும் விதமாக மண்ணையும் நீராதாரங்களையும் அழித்துவிட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு வெளி நாட்டிற்கு ஓடிச்சென்று சொகுசு வாழ்க்கையை தொடரவும் வாய்பை அள்ளி வழங்கிவிட்டு. உழைக்கு மக்களின் தலைகளில் கைகளை வைக்கின்றது இந்த பிரிவினைவாத அரசு.

நாட்டில் ஏழைகளின் உணவில் கைவைக்கும் விதமாக இந்த பிரிவினைவாத அரசு திட்டங்கள் தீட்டி அழகாக நடத்தியும் வருகின்றது.

ஏற்கனவே மாநில அரசுக்கள் அமைத்த சாலைகளை புறவழிகளில் இணைக்கும் வழிகளை மட்டும் அமைத்துவிட்டு 170 கிலோமீட்டருக்கு 200 ரூபாய் வரை உபயோக வரி என்று கொள்ளை அடிக்கின்றது மைய அரசு. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் பயன்பாட்டுக்கு என்று அரசு செய்யப்போகும் காரியங்களுக்காக என்று தான் மக்கள் வரி கட்டுகிறார்கள்.

 நான் இதுவரையில் கட்டிய வரியில் எனக்கு அமைத்துகொடுத்த சாலைகள் எங்கே, எனது பணத்தில் எனக்காக கட்டிய சாலையில் எனக்கே பயன்பாட்டு வரியா. அங்கே கேள்வி கேட்க்க கோட்டைவிட்டோம் இப்போது நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேர்க்கவும் அதை எடுக்கவும் வரி என்ற அளவிற்கு வளர்ந்து நீற்கிறார்கள் இந்த பிரிவினைவாத அரசு.

 நரிக்கு நாட்டாமை கெடைச்சா கெடைக்கு இரண்டு ஆடு கேட்க்குமாம் அது போல் இருக்கிறது இந்த பிரிவினைவாத அரசு செயல்பாடுகள்.

0 comments: