Saturday, June 17, 2017

இந்த சூன் 30/2017க்குள் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து விடுங்கள்

2 நாட்களுக்கு முன் தான் இந்தியாவின் ஏழை அம்பாணிக்கு 45,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும். அந்த கடனால் தொழில் நடத்தமுடியாமல் அந்த ஏழை  மிகவும் சிரம்மப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இன்றைக்கு அந்த ஏழைக்கு உதவ மைய அரசு ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்தவும் செய்துள்ளது.

மைய அரசின் நிதி ஆயோக்கின் ஆயோக்கியர்கள் எல்லாம் முன்னாளில் அம்பாணியின் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். இப்போதும் மைய அரசின் நிதி ஆயோக்கில் அம்பாணிக்கா ஆயோக்கியர்களாக பணிபுரிகின்றார்கள்.

ஆந்த ஆயோக்கியர்களின் திட்டத்தின்படி ஆதார் எண் இல்லாத வங்கி கணக்கை எல்லாம் முடக்கி அந்த கணக்கில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் ஒரு 10 அல்லது 30 மாதங்களுக்கு முடக்கி கேட்டால் நாங்கள் 20 நாட்களுக்கு முன்னே சொன்னோம். ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு சேவை மையங்கள் அமைத்தோம். தமிழ் நாட்டில் நொடிக்கு 100 முறை தமிழ் வானொலியில் இந்தியில் கூவினோம் நீங்கள் யாரும் கவனிக்கவில்லை. ஆகவே 30 மாதங்களுக்கு உங்கள் பணம் எல்லாம் எடுக்கமுடியாடு மித்ரோன் என்று சொல்வர்கள்.

பிறகு பழைய 500, 1000 நோட்டுகளை நீங்கள் மாற்றினால் தறமாட்டோம் ஆனால் அதையே பெருமாள் கோவில் சார்பில் கொண்டு வந்துக்கொடுத்தால் மாற்றி தருவோம் என்று செல்கிறார்கள் இல்லை அது போல். ஆதார் எண் இல்லாத கணக்கில் இருக்கும் பணம் எல்லாம் கள்ளப்பணம் என்று சொல்லு அபகரித்து அந்த ஏழை அம்பாணியின் 45,000 கோடி பணத்தை கொடுத்து அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேன் என்று குரங்கு குளியலில் அடவு கட்டி கூத்தாடுவார் மோடி.

குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்கள் ஆன தமிழ்நாட்டை தான் முதலில் குறிவைத்து இருக்கிறார்கள் என்ற தகவல் வேறு வருகின்றது.

ஆகவே உங்கள் பணத்தை காத்துக்கொள்ளுங்கள் போன பின் புலம்பாதீர்கள் சொல்லிப்புட்டோம் அவ்வளவுதான் இனி நீங்களாச்சு உங்கள் ஏழை அம்பாணியாச்சு. நாங்கள் எல்லாம் எங்கள் பணத்தை அம்பாணிக்கு கொடுப்பதாக இல்லை.

1 comments:

Anonymous said...

Seriously? Great gate. Time for the Last Resort!