Sunday, June 11, 2017

இலட்ச இலட்ச்சமாய் புன்னியம் சேர்க்கப்போகும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இந்திய பணம் 5000 ரூபாய்களுக்கு மேல் வெளி நாட்டிற்கு பணமாக கொண்டு சென்றால் அது சட்டவிரோதம் ஆகையால் வெளி நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 ஆயிரம் 10 ஆயிரம் முதல் 3, 4 இலட்சங்கள் வரை எல்லாம் சட்ட விரோதமாக கொண்டு சொல்லப்பட்ட பணம். ஆகையால் அந்த பணத்தை இந்தியாவிற்குள் எடுத்துவருவதோ அல்லது பழைய செல்லாத நோட்டுக்களுக்கு புது  நோட்டுகளை மாற்ற நினைப்பதே தேச துரோகமாக கருதி தூக்கில் ஏற்றப்படுவீர்.

ஆகவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அறிவுறையின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி அவர்களிடம் இருக்கும் இந்திய பணத்தை கோவில்களில் தான் போட வேண்டும்.

அந்த பணத்தை கோவில்கள் கொண்டு சென்று நல்ல பணமாக பெற்று தங்களது காரியங்களுக்கு பயன்படுத்தலாம். ஆகையால் இனியும் உங்களிடம் இருக்கும் இந்திய பணத்தை வைத்துக்கொண்டு இலவு காப்பதைவிட கோவில் உண்டியல்களில் போட்டு புன்னியம் பெறலாம்.

கோவில்கள் என்றால் முருகன் முனீசுவரன் என்று எல்லாம் நினைக்காதீர்கள், திருப்பதிக்கு உண்டு என்று மட்டும் சொல்கிறார்கள். இந்து கோவில்கள் தவிர மற்ற மத கோவில்களுக்கு எல்லாம் இந்த சலுகைகள் இல்லை என்று தான் சொல்லி இருப்பார்கள்.

0 comments: