Tuesday, July 26, 2016

கபாலி நிமித்தமாக IT மக்களுக்கு தொற்றி கொண்ட சமூக சிந்தனை வியாதி

கபாலி படம் வர இருக்கும் வாரத்தில் இருந்து இன்று வரை இப்படி ஒரு செய்தி இணையத்தில் வலம் வருகின்றது. இவ்வளவு சம்பாதிக்கும் நடிகர் தமிழகத்துக்கோ இந்தியாவிற்கோ என்ன செய்து இருக்கிறார். அவரது படத்தை பார்க்க இவ்வளவு காசு கொடுக்க வேண்டுமா என்று.

இதிலே பியூசை வேற வம்புக்கு இழுத்து ஒரு ஒப்பீடு வேறு, என்னத்த சொல்ல.

நாமும் கேட்போம் இந்த IT மக்களை பார்த்து, இணையத்தில் பொங்கி வழியும் சமூக புலிகளே உங்கள் தந்தையின் சம்பளத்தை விட நீங்கள் குறைந்தது 5 மடங்கு சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த குறைந்த அளவு சம்பளத்தில் உங்கள் அப்பா உங்களுக்கு நீங்கள் படிக்கும் போது என்ன என்ன எல்லாம் கேட்டீர்களோ அவைகளை குறைகளே இல்லாமல் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தார்.

அது மட்டும் இல்லாது தொழில்நுட்ப்ப கல்வியை பயில செய்து இப்படி 5 மடங்கு அதிக ஊதியம் பெற வழி செய்த்தார்.

இந்த 5 மடங்கு சம்பளத்தில் எவ்வளவு பணத்தை எடுத்து நீங்கள் எல்லாம் எழுதும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட்டும், நாட்டின் நலனுக்காக செலவும் செய்து இருக்கிறீர்கள்.

சென்னை வெள்ளத்தின் போது களத்தில் இறங்கியும் அங்கே வராமலும் உதவிகளை கொட்டி குவித்த நல்ல உள்ளங்களை பார்த்து நான் கேட்க்கவில்லை என்றது வெட்ட வெளிச்சம். அவர்கள் கட்டாயம் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த இணைய சமுதாய புலிகள் வெகுண்டெழுந்து இலாப நட்ட கணக்குகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதி மீதி இவ்வளவு பணம் எதற்கு என்று எழுதும் நீங்கள், வெறும் ரூ4.80க்கு ஒரு கோக்கு/பெப்சி பாட்டிலை மொத்தவிலையில் வாங்கி ரூ65க்கு விற்கிறார்களே அவரகளது இலாபம் என்ன ஆனது என்றும், அந்த நுகர்வோர் பொருட்களை வாங்காதீர்கள் என்று இவர்கள் எழுதுவது உண்டா.

உள்ளூர் தயாரிப்பான இட்டிலி தோசைக்கு அதே 10, 40 ரூபாய். ஆனால் இதய நோயை வரவழைக்கும் பிட்சாவும் பர்கரும் 200 முதல் 500 வரை. நறுக்கியது போக மிச்சம் கீழே விழுந்த துண்டு காய்கறிகளையும் மிச்ச மீதியான சீசையும் கொண்டு தயாரிக்கப்படும் உணவு பீட்சா, இப்போது இதை ஏதோ ஒரு புதிய தயாரிப்பாக கருதிக்கொண்டு தயாரிக்கிறார்கள் என்றது வேறு கதை. பர்கர் கதையோ இன்னும் பரிதாபம், ஆடு மற்றும் மாட்டின் இறைச்சிகளை வேண்டிய துண்டுகளாக வெட்டி எடுத்தபின் விழும் மிச்ச மீதிகளை எடுத்து கொஞ்சம் மாவு மற்றும் முட்டையுடன் அரைத்து வடைபோல் தட்டி கல்லிலோ அல்லது எண்ணையிலோ சுட்ட உணவு பர்கர்.

இறைச்சியில் மிஞ்சிக்கிடக்கும் கொழுப்பை அப்படியே சோப்பு தயாரித்து கரை நல்லது என்று பலபளப்பான விளம்பரத்துடன் வெளியிடுவார்கள், இவர்களும் அவைகளை வாங்கி பூரிப்பு அடைவார்கள்.

ஆக மொத்தம் அமெரிக்காவில் கீழே கொட்டும் பொருட்களை எல்லாம் பொருக்கி சிகுனா தாளில் சுற்றி அழகாக ஆங்கில பெயர் சூட்டி கொடுத்தால் ஒன்று பத்துவிலை கொடுத்து வாங்கி சாப்பிட்டு பெருமை பேசும் இந்த மக்கள் ஏன் உள்ளூர் சத்தான தயாரிப்பான உணவுகளை வாங்கு சாப்பிடுவது இல்லை. இந்த கழிவு பொருட்களுக்கு இவ்வளவு விலையா ஏன் என்று இந்த இணைய புலிகள் என்றைகாவது கேட்டது உண்டா.

அவனவன் திறமைக்கு ஏற்றார் போல் அவனவன் சம்பாதிக்கின்றான், அடுத்தவனுக்கு பிரசங்கம் செய்யும் முன்பு தான் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்ருங்கள் இணைய புலிகளே.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் படம் வந்த போது எந்த சலனமும் இல்லாமல் இருந்தது போல் இருந்துவிட்டு போங்கள் கபாலிக்கும்.

1 comments:

')) said...



Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. Somebody in TN told that this movie is a Dalit movie. But I strongly say that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

Watch more Kabali!

By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.