Monday, July 18, 2016

சுவாத்தி கொலை உண்மையை தானாக முன் வந்து ஒத்துக்கொள்ளும் பாசக - எச்சி இராசாவின் ஒப்புதல் வாக்குமூலம்

சுவாத்தியின் கொலையை பயன்படுத்தி இன்னும் ஒரு கோத்ரா கலவரம் செய்ய பாசக தீவிரம்

இந்த பதிவை எழுதியபோது என்னவோ கற்பனையாக எழுதியதாக தான் எல்லோரும் பார்த்தார்கள் சிலர் பின்னூட்டமும் இட்டார்கள்.

இன்றைக்கு வந்திருக்கும் செய்தியை பாருங்கள் பாசகவின் திட்டம் என்னவாக இருந்தது என்று எச்சி.இராசா தெளிவாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

 நக்கீரனில் வெளியான செய்தி

செய்தி அழிக்கப்படலாம் இணைப்பு நீக்கப்படலாம் அதனால் அந்த செய்தியை எடுத்து இணைத்துள்ளேன்.

"
ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? : எச்.ராஜா 

சுவாதி கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பாரதீய ஜனதா அகில இந்திய செயலாளர் எச்.ராஜா,

’’நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார்.

சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது’’என்று கூறியுள்ளார்.

அவர் மேலும்,  ‘’எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவஉணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள்.  அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்போது அதை திசைதிருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார். எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்."

திருமாவளவனுக்கு எப்படி இவ்வளவு செய்திகள் தெரியும் என்று கேட்கும் எச்சி.இராசாவுக்கு எங்களுக்கு கிடைத்த தகவலின் படி என்று சொல்லிய தகவல்களை கொடுத்தது யார் என்று சொல்ல கடமைபட்டு இருக்கிறார். மேலும், துவக்கத்தில் இருந்து முசுலீம் என்ற சொல் இந்த வழக்கில் அதிகமாக பயன்படுத்தபட்டு இருப்பதை கவனிக்க முடியும்.


இந்துவாக மாற இருந்ததால் சைவம் சாப்பிட்டார் என்ற தகவல்கள் மட்டும் எப்படிஎச்சி.இராசா வகையாருக்கு தெரியும், கொடுத்தவர்கள் யார். யாருடைய தலைமையில் இந்த செய்திகள் எல்லாம் திரட்டப்பட்டது என்றும் சொல்ல இவர் கடமைபட்டுள்ளார்.

தமிழகத்தில் தன்மக்களை பலி கொடுத்தாவது தங்களது அரசியல் கணக்கை தொடங்க வேண்டும் என்று பாசக அலைகின்றது. நாளை கொல்லப்படப்போவது உங்கள் மகள்/மகனாக இருக்கலாம் சிந்தியுங்கள் மக்களே இந்த மாதிரியான செய்திகளை புரம் தள்ளுவது மட்டும் இல்லை பரப்பவும் அனுமதிகாதீர்கள்.

2 comments:

Anonymous said...

பொய்யாக கதை திரிக்கும் உரிமை திருட்டு மாவளவனுக்கு மட்டும் தான் இருக்கா ?
பாஜக திரிப்பு கதைகளை செய்ய உரிமை இல்லையா ?

')) said...

அப்போ இது எல்லாம் உங்களின் இன்னும் ஒரு கோத்ராவை உருவாக்க போட்ட திட்டம் என்று வாக்கு மூலம் கொடுக்க்குறீர்களே. பரவாயில்லையே பாசக/RSS மக்கள் கூட உண்மையை கூறுகிறார்களே...........ஒத்துக்கொண்டமைக்கு நன்றி நண்பரே