Monday, July 11, 2016

மாதொருபாகனை விமர்சிக்கும் குருமூர்த்தி நடிகர் உதயநிதியை விமர்சிகாதும் வழக்கு போடாததும் ஏன்

மாதொருபாகனை வரிக்கு வரி விமர்சனம் செய்தும் நீதிமன்றதில் வழக்கில் வாதாடிய குருமூர்த்தி அதே பாணியில் இருக்கும் திரைபடம் மனிதன் படத்தை விமர்சிக்காமலும் வழக்கு தொடுக்காமலும் இருப்பது ஏன் என்று விளக்குவாரா.

என்ன தான் படம் துவங்குவதற்கு முன் அனைத்தும் கற்பனை என்று சொன்னாலும், வழக்கை துவங்கும் முன்பு அனைவருக்கு முன் நிலையிலும் ஒரு நீதியரசர் ஒரு செல்வாக்கு மிகுந்த வக்கீலுடன் தனது வீட்டு மனை வாங்குதல் பற்றி பேசுவதாக காட்டுவதாகட்டும்.

நீதியரசர்களுகே சந்தேகம் என்றால் உங்களை தானே கேட்ப்பார்கள் என்று நீதியரசர் சொல்லும் வசனமாகட்டும்.

எந்த நீதிபதி அப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற அரைகூவலையாவது விட்டிருக்க வேண்டும் இந்த குருமூர்த்தியும் அவரது பின்னால் இருந்து இயக்கும் சக்திகளும்.

சாட்சி யார் என்று நீதிமன்றத்தில் குறிபிட்டே ஆகவேண்டும் என்று கேட்பதும், பின் குறிப்பிட்டதும் சாட்சிகளை கொல்வதும், மிரட்டுவதும், கடத்துவதும் என்று அழகாக படம் முழுக்க காட்டியுள்ளார்கள். இந்த காட்சிகள் பார்க்கும் மக்களை நாடு இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்க வைக்கும் விதமாக இருக்கிறது என்று ஏன் இவர்கள் கொதித்து எழவில்லை.

அதுவும் இந்த படம் தேர்தக் சமயத்தில் வெளி வந்தவை, அதுவும் ஒரு பலம் பொருந்திய கட்சியை சேர்ந்தவர் நல்லவர் போல் வேடம் இட்டு நடித்து நாட்டையும் வீட்டையும் காக்கும் சக்தி அவரிடம் உள்ளது போல் நடித்து நாட்டு மக்களை ஏமாற்ற பார்த்துள்ளார் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

படத்தின் இன்னும் ஒரு கொடூரம் என்ன என்றால் செல்வந்தர்கள் இரவு நேரங்களில் பெண்களை காரில் ஏற்றிக்கொண்டு செல்வதும், இவன் அழைத்து செல்லும் பெண் அவனிடம் தனது தொடர்பு எண்ணை சொல்வதும் போல் காட்சிகளை அமைத்து பெண்களை இழிவுபடித்தியுள்ளார் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

வடகத்திய தொழில் அதிபர் என்றால், அவரது மகன் இரவு நேரங்களில் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு தாறுமாறாக வண்டியை ஓட்டி வருவான் என்றும். நடைபாதை என்றால் தூங்கும் இடம் அல்ல என்றும் அதே சமயத்தில் வண்டி ஓட்டுவதற்கும் இல்லை என்றும் சொல்லும் போன்ற வசனங்கள் சாலையோர மக்களை மனம் நோகும்படி இருக்கிறது என்று ஏன் வழக்கு தொடுத்து படத்திற்கு தடை இன்னும் வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு திறமையான வக்கீல் தனது சம்பள பணத்தில் ஏமாற்றபட்டால் இப்படி தான் சட்டத்தின் விளையாட்டில் இறங்கி பணம் கொள்ளையடிப்பார் என்றால், தனக்கு எதிரிகளே கிடையாது தெரியுமா என்று சொல்லும் அந்த செல்வந்தர் இந்த வக்கீலிடமே தஞ்சம் அடையும் படி கதையமைத்து இருப்பது செல்வந்தர்களின் மனம் புண்பட்டுவிட்டது என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.

இவை எல்லவறறையும் விட, வெட்ட வெளியில், அனைவரும் பார்க்க ஞாயத்திற்காக போராடும் இளைஞனை விலை பேசும் விதமாக காட்டுவதும் பிறகு அவன் அதை எதிர்த்து போராடுவதாக காட்டுவதும் ஏர்செல் மேக்சிசு வழக்கில் மாட்டி இருக்கும் மாறன் சகோதர்கள் மிகவும் ஞாயமானவர்களாக படம் காட்டுகிறது என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை குருமூர்த்தி மற்றும் குழுவினர்கள்.

ஏன் என்றால் மாதொருபாகன் ஆசிரியர் போல் ஓங்கி அடித்தால் ஒரு டன் வெய்ட்டுடா பாக்குறியா பாக்குறியா என்று வசனம் பேசி அடிக்க உதயநிதி என்ன கேட்க நாதியில்ல பிள்ளையா.

துப்பு கெட்ட குருமூர்த்தி இதிலே அவனை கூப்பிடு கேளுங்க இவர்களை கூப்பிடு கேளுங்கள் என்று சினிமா வசனம் போல் வசனம் வேறு.

கேட்பவர் கேனையாக இருந்தால் கோட்சே மகாத்துமா என்று சொல்வார்கள் இந்த கோத்ராகாரர்கள்........

0 comments: