Thursday, July 14, 2016

காசுமீருக்கு வாச்சது ஈழத்திற்கு வாய்க்காமல் போனதே........

காசுமீரில் எது நடந்தாலும் அந்த ஊர் மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ பக்கத்து நாடும் அதன் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் கட்டாயம் கேட்ப்பார்கள். அது மட்டும் இல்லை அதற்கு மிகவும் பொறுப்பாக இந்திய அரசும், இராணுவமும் கூட ஐநா சபை வரை சென்று புகாரில் இருந்து சமாதானம் வரை சொல்லும்.

சரியோ தவறோ, நல்லதோ தீமையோ இருப்பினும் விடமாட்டார்கள் என்ற தைரியம் இருப்பதால் தான் காசுமீரத்தில் இன்றைக்கு உயிரை கொடுத்தாவது போராடுவோம் என்று போராடுகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் அங்கு ஒரு கருணாவை கண்டு பிடிக்க முடியவில்லை, ஐநாவுக்கு வா, செனிவாக்கு வா என்று தண்ணீர் காட்ட முடியவில்லை. ஒரு டக்குலசுசை கண்டு பிடிக்கமுடியவில்லை, ஒரு சுப்பிரமணி சாமியை கண்டு பிடிக்கமுடியவில்லை, என் ராமைவிட்டு சுதந்திர காசுமீரம் வந்தால் அவர்கள் இந்தியாவையே தீயிட்டு கொளுத்திவிடுவார்கள் என்று எழுத வைக்க முடியவில்லை.

ஆனால்  ஒன்று மட்டும் சாத்தியம் ஆக்கி இருக்கிறது, IPKF போல் காசுமீரத்திலும் இராணுவம் கட்டற்ற பாலியல் வன்முறையை மேற்கொண்டு வருவது மட்டும்.

காசுமீரம் இந்தியாவின் ஒரு பகுதி, அப்போ ஈழம் என்ன ஆப்ரிகாவின் பகுதினா அவர்கள் சொன்னார்கள்.

ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையும் என்று அவாள் எல்லாம் சொல்வார்கள். ஆனால் காசுமீரமும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் இழப்பினை பற்றி வாய் திறக்கமாட்டார்கள் ஏன் இந்தியும், அரபியும் பேசுவதாலா....இல்லை தமிழ் பேசாததினாலா....

இது என்ன மாயமோ................

0 comments: