Thursday, July 7, 2016

இந்தியாவில் காமிரா செல்பேசிகளை உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் விதிக்கலாம்

அந்த நாயை 4வது மாடியில் இருந்து வீசி அதை காமிரா செல்பேசி மூலம் தான் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

எப்படி மாடுகளை வளர்க்கவோ, கொல்லவோ, சாப்பிடவோ தடை இல்லையோ அது போல நாயை வளர்க்கலாம், கொல்லலாம், சாப்பிடலாம் தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நாயயை 4 மாடியில் இருந்து தூக்கி எரிய காரணமாக அமைந்த செல்பேசியையும் அதை இணையத்தில் வெளியிட்ட தால் இணையத்தையும் தடை செய்ய பீட்ட நிறுவனமும் விலங்கார்வலர்களும் வழக்கு தொடுக்க உள்ளனர்.

அல்லது குறைந்தது முக நூலுக்காவது தடை  விதியுங்கள் என்றும் கூட சொல்வார்கள்.

பிறகு ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்சி மாறுபாடு இல்லாமல் நான் அனுமதி வாங்கி தரேன் எனக்கு ஓட்டு போடுங்க என்று பல் இளிக்கும். பாசக மாநில அரசு தான் செய்யனும் என்று ஒரு 100 நாட்கள் கழித்து சொல்லும்.

இந்தியாவின் விலையுயர்ந்த வக்கீல்கள் பணமே வாங்காமல் வாதாடி தடை வாங்கி தருவார்கள் பாருங்கள்.

0 comments: