Thursday, July 14, 2016

யார் அப்பன் வீட்டு பணம் இந்த ரூ616 கோடி மோடி தான்சானியாக்கு தூக்கி கொடுக்க

மோடி பதிவி ஏற்றதில் இருந்து அந்த நாடுக்கு இவ்வளவு பணம், இந்த நாட்டு இவ்வளவு என்று வெவ்வேறு நாடுகளின் பெயரில் இந்தியாவின் வரிப்பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறார்.

இந்த பணம் எல்லாம் மோடி குசராத்து முதல்வராக இருந்த போது சம்பாதித்ததோ இல்லை பாசகவின் கட்சி பணமோ இல்லை.

இந்தியாவில் மாதம் கையெழுத்திட்டு சம்பளம் பெறும் நடுத்தர வர்க மக்களை கேட்காமலேயே அவர்களது சம்பளத்தில் இருந்து அரசு எடுத்துக்கொள்ளும் வரிப்பணம்.

அடி தட்டு மக்கள் பெறும் தின சம்பளத்திற்கு அவர்கள் வரி கட்டுவது இல்லை. மேல் தட்டு மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் வரிக்கட்டுவதும் இல்லை வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதும் இல்லை.

மேல் தட்டுமக்கள் உடனே வரிந்துக்கட்டிக்கொண்டு அப்போ இந்திய அரசின் வரிப்பணம் பூரா நடுத்தட்டு மக்களின் வருமான வரிப்பணமா என்று மிகவும் புத்திசாலி தனமாக கேட்ப்பார்கள். ஆமாம் நடுத்தட்டு மக்களின் வருமான வரிப்பணமும், அது நிமித்தமாக ஆன செலவுக்கு தொழில் நிறுவனங்கள் வருமான வரி கட்டாமல் தவிர்க்க கணக்கு காட்டி கட்டிய பணமே அன்றி மேல் தட்டுமக்களின் வருமான வரிப்பணம் இல்லவே இல்லை. அது மட்டும் இல்லாது அனைத்து தட்டு மக்களும் வாங்கும் சேவைக்கும், பொருட்களுக்கும் விதிக்கும் வரியுமே இந்த மோடி அரசாங்கம் வாரி வழங்கும் இந்த பணம்.

இப்படி அடுத்த நாடுகளின் பெயரில் உதவி என்று மோடி திட்டங்களாக கொடுக்கும் பணம் அதானியின் நிறுவனங்களில் ஒன்று ஒப்பந்தம்மிட்டு இந்திய அரசின் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் பணியை பூர்த்தி செய்யும்.

இலவசமாக இந்திய அரசு அடுத்த நாட்டிற்கு செய்யும் உதவி அதனால் எந்த தரத்தில் அந்த பொருட்களோ உதவிகளோ இருக்கிறது என்று அந்த நாடுகள் வாய்திறப்பது இல்லை காரணம் அவைகள் இலவசமாக வலிந்து கொடுக்கப்பட்டவை.

கிட்டதட்ட உள்ளாட்சி தேர்தல் முடிந்த உடனே நன்றாக இருக்கும் தெரு சாக்கடைகளை உடைத்துவிட்டு மீண்டும் அதே சாக்கடைகளை முன்பைவிட கேவலமாக கட்டுவார்களே அதே போல் இருக்கும் இந்த இந்த வெளிநாட்டு இலவச திட்டங்கள்.

இந்த உப்புமா திட்டங்களுக்கு சிறு நகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை வாழும் நடுத்தட்டு மக்கள் தங்களது சமையல் எரிக்காற்று மானியம் முதல் சிறு விவசாயிகள் வரை உர மானியம் வரை விட்டுக்கொடுத்தல் வேண்டும்.

ஏன் என்றால் அப்போது தான் இந்தியாவிற்கு சமீபத்தில் உலக வங்கு கொடுத்த 620 பில்லியன் அமெரிக்க டாலர் சூரிய சக்தி மின்சார அமைப்புகளுக்கான உதவி  தொகை கிடைக்கும்.

அந்த உதவி தொகைகளையும் அதானியின் இன்னும் ஒரு உப்புமா நிறுவனம் உப்புமா தயாரிப்புகளை நடுத்தர மற்றும் கிராமபுர மக்களின் கூறைகளில் நிறுவி விட்டு 70% முதல் 90% சதவிகித பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு மின்மிகை நாடாக இந்தியா ஆகிவிட்டது ஆகையால் அடுத்த ஆண்டில் சர்வதேச மின்மிகை நாடு இந்தியா என்று ஐநா அறிவிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு 2 மில்லியன் அமெரிக்க டாலரில் ஆப்ரிக்க நாடுகளில் ஒரு நாட்டுக்கு உதவி என்று அறிவிக்கும் மோடி அரசு.

உலக வங்கி கடன்/உதவி கொடுத்தாலும் அதானிக்கு, இந்தியா வெளி நாடுகளுக்கு உதவி என்று அறிவித்தாலும் அதானிக்கு ஏன் இப்படி விஞ்னான பூர்வமான ஊழல். பேசாமல் அப்படியே இந்தியாவில் வரும் அரசு வருமானம் எல்லாம் இனி அதானிக்கு தான் என்று சொல்லிவிட வேண்டியது தானே மோடி..........

எதிர்கட்சிகளும் சரி செய்தி இதழ்களும் சரி, ஏன் பொருளாதார புலிகள் என்று சொல்லும்/சொல்லிக்கொள்ளும் வல்லுனர்களும் சரி இது வரையில் இவைகள் பற்றி வாய்திறக்காமல் இருப்பது சோகமே.......

0 comments: