Monday, August 1, 2016

பாசக வளர்க்கும் பிம்பம் - விழித்துகொள்ளுமா அரபு நாடுகளும் அதன் முதலாளிகளும்

சவூதியில் சிக்கியிருக்கும் 10,000 இந்தியர்களும்  தாயகம் அழைத்து வரப்படுவார்கள்: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

இன்றைய செய்திகளில் மேலே சொன்ன செய்தி தலைப்பாய் வந்துள்ளது, இப்படி அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் மிகவும் முக்கியம் கொடுத்து செய்தி அடிக்கடி வெளியாவதை கவனிக்க முடியும்.

சவுதியில் மட்டும் இல்லை உலகில் எந்த நாட்டில் எல்லாம் வேலைக்கு மக்கள் செல்கின்றார்களோ அங்கே எல்லாம் இந்த அவலம் தொடர்வது தவிர்க்க முடியாதும் கூட. வேலை அதிகம் இருக்கும் போது மக்களை தேவைக்கு அதிமாக குவிப்பதும் வேலை முடிந்த உடன் திரும்பி செல்லுமாறு அறிவுருத்துவதும் தான் அனேகமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை.

நாட்டின் உள்ளே அழைத்து வரும் போது விசா மற்றும் பயண ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும். ஆனால் திரும்பி செல்வதும் மாற்று ஏற்படுகளை கவனித்துகொள்வதும் அவரவருடைய தனிப்பட்ட கடமையாகி போகின்றது. திரும்பி செல்லவும் அழைத்து வந்த நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் என்று பாராளுமன்றதில் அம்மையார் கொடுத்து இருக்கும் தகவல் தவறானது.

அந்தந்த நாட்டின் நடப்புகளில் சொல்வதை போல் வேலை இல்லை நாடு திரும்பவும் என்று அறிவித்ததோடு நிறுவனங்களை கடமை முடிகின்றது.

தாயகம் திரும்புவது திரும்பாததும் அவரருடைய தனிப்பட்ட செயல்.

சம்பாதித்த காசை எல்லாம் குடும்பத்திற்கு அனுப்பிவிட்டு  அடுத்த மாத சம்பளத்தை எதிர்பார்த்து இருக்கும் குடும்ப தலைகளும் சரி, கடமைகளை செய்ய நேர்ந்துவிட்ட தலைமகன்களுக்கும் சரி. அடுத்த மாத சம்பளம் வந்ததும் பார்த்துக்கொள்வோம் என்று இருந்த அப்பாவிகளின் நிலையை தான் இந்த அம்மையார் என்னவோ மாபாதக செயலாக வர்ணித்து பேசியுள்ளார்.

அப்போ அமெரிக்கா முதல் அத்தேரிலியா வரை வேலை பார்க்கும் தகவல் தொழில்னுட்ப்ப ஆட்கள் எல்லாம் எப்படி இந்த பட்டியளில் விடபட்டார்கள் என்று விளக்குவார்களா அம்மையார்.

எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்றதை விட எந்த விகிதத்தில் தங்களது ஊதியத்தை இந்த தலைமகன்கள் தாயகம் அனுப்புகிறார்கள் என்றால் எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி அவர்களின் அயலக பொருளாதார நிலை கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கும், எப்படி....

அளவுக்கு மீறிய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்ச நாளைக்கு என்று வெளி நாட்டில் வேலைக்கு வரும் சராசரி ஆணும் சரி பெண்ணும் சரி, தனது தேவைகள் பூர்த்தி ஆகுகின்றதோ இல்லையோ குடும்பத்தின் தேவைகளை பூத்தி செய்வதையே பிறவியின் பயனாய் நினைத்து செயல்படுவோர் இவர்கள்.

கொஞ்ச நாள் தான் பிறகு நிலைமை சரியானதும் நமது தேவைகளை சரி செய்துகொள்வோம் என்ற கனவில் இருப்பார்கள் ஆரம்பத்தில்.

பிறகு காலம் செல்ல செல்ல தான் புரியும், தற்பொழுதைய நிலைக்கு ஏற்ப தனது குடும்ப தேவைவகள் அதிகரித்துக்கொண்டே தான் செல்லுமே தவிர நிறைவேறியதாக ஒரு நிலையை தொடாது என்று.

இருப்பினும் எந்த ஒரு சலனதிற்கும் மனதில் இடம் கொடுக்காது கொண்ட கடமையை செவ்வனே செய்துவரும் அந்த அன்பான மக்களின் நிலையை என்னவோ சவுதியிலும் மற்ற அரபு நாடுகளில் மட்டுமே நசுக்கப்படுவதாக பாசக பரைசாற்றவும். அவர்களின் பாதுகாவலனாகவும் அரணாகவும் தான் இருப்பதாக பாசக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

இது ஏனைய எல்லா நாடுகளின் நிலைமை தான் என்று சொல்ல மறுபதன் அரசியலை அரபு நாடுகளில் வேலைபார்க்கும் நண்பர்களும் அவர்களின் குடும்பங்களும் விளங்கி கொள்ளுதல் அவசியம். மற்ற நாடுகளில் இருக்கும் இத்தகைய மக்களை ஏன் பாசக அரசு கண்டுகொள்வதில்லை என்று விளக்கவும் வேண்டும்.

இந்த நிலைமைக்கு ஒரு திறம் வாய்ந்த அரசு என்ன செய்யவேண்டும் இலவசமாக உணவும் பயண ஏற்பாடுகள் மட்டும் கவனித்தால் மட்டுமா அதன் கவலை. இந்த நிலை மேலும் நடக்காமல் இருக்க அப்படி குறைந்த சம்பளத்தில் அழைத்து செல்லும் நிறுவனங்கள் அழைத்து செல்ல பயண ஏற்பட்டுகளை கவனிப்பது போல் திரும்பி வரும் ஏற்பாட்டுகளையும் கவனிக்க வேண்டியது கட்டாயம் என்று ஆக்க வேண்டாமா.

வியாபாரம் பட்டு போய்விட்டது ஆகையால் நாங்கள் எங்கள் நிறுவனத்தை மூடுகின்றோம் இந்த நிலையில் எங்களால் பயண ஏற்பாட்டை கவனிக்க முடியாது என்று நீலிக்கண்ணீர் சிந்துவார்கள் என்று எதிர்பார்த்து. பாரத்தது ஆட்களை வெளி நாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு அழைப்பதாக இருந்தால், இந்திய குடியுரிமை இருக்கும் வரையில் அவர்களது தாயக திரும்ப பயண தொகையை விசா கிடைக்கும் காலம் வரையில் கணக்கிட்டு முன்பணமாக கொடுக்க வேண்டும் கடாயமாக என்று அல்லவா பேசி இருக்க வேண்டும் அம்மையார்.

அதை விடுத்து அந்த முதலாளிகளின் கொள்ளை இலாபத்தில் விளையும் நட்டதிற்கு நடுத்தர மக்கள் கட்டும் கட்டாய வரிப்பணத்தில் அல்லவா பாசக அரசியல் விளம்பரம் செய்கின்றது.

எந்த ஒரு நாட்டிலும் தன்னால் தாயகம் திரும்ப முடியவில்லை அதனால் என்னை திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று அயலுரவு நிறுவனங்களை அனுகினால் ஏற்பாடு செய்வார்கள் அவர்களது பணத்திலே என்ன திரும்ப அந்த நாட்டிற்கு வர விசா கொடுக்க மாட்டார்கள் அவ்வளவு தான்.

நிரந்தரமாக ஒரு தீர்வை எட்டுவதற்கு பதில் என்ன ஒரு கபட நாடக பாசக அரசில். அது சரி நாடகம் ஆடியே நாட்டை பிடித்தவர்கள் ஆயிற்றே இவர்கள் வேறு என்ன செய்வார்கள்.

சரி ஆளும் பாசக தான் செய்யவில்லை எதிர்கட்சியாவது இப்படி ஒரு குரளை எழுப்புகிறார்களா என்று பார்ப்போம்........

இந்த கட்டண வசூலை இந்திய அரசு வசூலித்து நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துவதை விட எந்த நாடு விசா கொடுக்கின்றதோ அந்தந்த நாடுகளே வசூலித்து நடைமுறை படுத்தினால் இன்னமும் நப்பிக்கையாகவும் சிறப்பாகவும் இருக்கும்........கவனிப்பார்களா அரபு நாடும் அதன் முதலாளிகளும்.

0 comments: