Wednesday, July 6, 2016

உடுமலைக்கு குரல் கொடுக்காத இராமதாசும் எச்சி இராசாவும் இப்போ கதறுவதேன்

உடுமலை சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு வேறு முக்கியமான செய்திகளை கொடுத்து இருக்கிறேன் சென்று அதன் வேலைகளை பாருங்கள் என்று கூறினார் ஐயா இராமதாசு அன்று. ஏன், அன்று கொல்லப்பட்ட நபர் சுவாதியின் சாதியை சார்ந்தவர் இல்லை அதனால். இன்றைக்கு கேட்டால் மருத்துவர் ஐயாவும் அவருடன் கையெழுத்துடன் அலையும் அவரது செல்லமகனும் வேறு எதாவது ஒரு கதை சொல்லி அன்னை பிள்ளைகளுக்கு சாதம் ஊட்டுவது போல் பொய்யுரைபார்கள்.

இந்த எச்சி இராசா மற்றும் சிரிப்பு நடிகர்கள் சேகரும், மகேந்திரனும் அன்றைக்கு எதுவுமே நடக்காதது போல் இருந்துவிட்டு இன்றைக்கு அடவு கட்டி ஆடுவது என்ன பாருங்கள். என்ன இவர்களின் மனித நேயம்.

மறைந்த அந்த பெண்ணின் மறைவை வைத்து தமிழகத்தில் எப்படியாவது ஒரு கோத்ராவை உருவாக்கி விடவேண்டும் என்று அழகாக காய் நகர்த்துகிறார்கள்.

இன்றைக்கு சென்னையில் வெளியில் ஆண்களுடன் சுத்தும் பெண்களை பார்க்கும் போது அடுத்த பலிகெடா இவராக கூட இருக்க கூடும் என்ற நிலையில் தான் இருக்கிறது.

மேலும் இப்படி பொதுமக்கள் பார்க்கும் படி பெண்கள் துன்புறுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் இது முதல் முறை இல்லை என்ற செய்தியையும் அழக்காக இந்த கோத்ரா கூட்டம் மறைப்பதையும் பார்க்கமுடியும்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தாகிவிட்டது அங்கே சங்கர் ராமன் கொலை வழக்கில் சொன்ன தீர்ப்பு போலவா எதுவுமே நடக்கவில்லை என்று சொல்ல போகிறார்கள். எப்படியும் இதோடு சேர்த்து இல்லாத பொல்லாத வழக்குகளையும் இன்ன இன்ன இத்தியாதிகளையும் அவன் மீது சுமத்தி அவனது குடும்பம் மட்டும் அல்லாது அவன் ஊர் என்று சொன்னால் கூட தள்ளி நில்லு என்று சொல்கின்ற அளவிற்கு ஆக்காமல் விடமாட்டார்கள்.

இதில் பலியான அந்த பெண் தான் பாவம், முதலில் அந்த பெண் மிகவும் புனிதமானவர் என்று வரிக்கு வரி செய்தியாளர்கள் எழுதினார்கள்.

பிறகு அன்றைக்கு அந்த பெண்ணை கண்ணம் கண்ணமாக அடிக்கும் போது எதிர்ப்பு காட்டாமல் வாங்கினார் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த நபர் வேறு இந்த பிடிபட்ட நபர் வேறு என்று சொல்கிறார்கள்.

கூட்டிகழித்து பார்த்தால் கடைசியில் சுவாதியின் மானம் கப்பல் ஏறும் போல் தோன்றுகிறது.

சுவாதி 21ன்னை தாண்டிய வளர்ந்த பெண் அவளது விருப்ப படி என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்று கோபி நாத்து ஒரு கூட்டத்தை கூட்டி நீங்க ஏன் பெண்களோடு சுத்துகிறீர்கள் என்று நமீதாவை கூட்டி கேள்வி கேட்க வைக்காமல் இருந்தால் சரி.

சென்னையில் ஒரு தனியார் கணணி மையம் அதிலே சுமார் 19 அல்லது 18 வயது மதிக்க தக்க இளைஞன் யாரோ ஒரு பெண்ணுடன் தொலை பேசியில் பேசிக்கொண்டே அந்த மையத்து வேலைகளை பார்க்கிறான். அலை பேசியில் அடுத்தவர்கள் முன் பேசும் பேச்சுகள் இல்லை அவைகள், கேட்பவர்கள் முகம் சுளிக்கும் பேச்சுகள். இது காலை 10:30 மணிக்கு நடக்கும் காட்சிகள்.

தங்களின் அந்தரங்கம் பார்ப்பவர்களுக்கு காட்சி பொருளாக ஆக்கப்படுகின்றதே என்று கூட தெரியாத பெண் ஒரு நாள் சுவாதி போல் ஆக்கப்படுகின்றாளோ இல்லை உடுமலையில் மண்டை உடைக்கப்பட்டு யாரும் கேட்க்காத நிலைக்கு தள்ளப்படுகின்றாளோ, அது அந்த பையனின் சாதியை பொருத்து அல்லவா நிர்ணயக்கப்படும். அந்த பையன் என்ன சாதியோ, இராமதாசும் கோத்ரா கூட்டங்களும் கண்டுபிடித்து நிறுத்தினால் நல்லது.

0 comments: