Friday, July 1, 2016

மோடி அரசே சோலார் மானியத்தி விட்டுக்கொடு ஒரு ஏழை நாட்டில் விளக்கெரியட்டும்

கீழே கொடுத்து இருக்கும் மோடியின் விளம்பரம் நடுத்தர மக்களின் மனசாட்சியை குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தி நான் செத்தாலும் பரவாயில்லையா அவன் நல்ல இருந்துட்டு போகட்டும் என்று இது வரை 1 கோடி பேர் திருப்பிக்கொடுத்துவிட்டதாக மோடி அரசே விளம்பரம் செய்கின்றது.

ஒரு மாதத்தில் பாதி நாட்கள் வெளி நாடுகளில் வாழும் ஒரே பிரதமர், ஆசியாவில் எந்த நாட்டிற்கு எந்த பாதிப்பு வந்தாலும் பணத்தையும் மற்ற உதவிகளையும் கேட்காமலேயே அள்ளி வீசும் நாடு. உலக அணுசக்தி நாடுகளின் பட்டியலிலும் பாதுகாப்பு கவுன்சிலிலும் நிரந்தர இடம். 21 முதல் 60 செயற்கைகோள்களை விண்ணில் ஒரே ஒராக்கெட்டில் செலுத்த வல்லமை உள்ள நாடு. உலகிலேயே மிக பெரிய இராணுவம். ஆசியாவிலே அதிக தொழிலாளர்களை கொண்ட நாடு.

இப்படி தாறுமாறாக பணம் கொண்ட நாடு இந்தியா என்று சொல்வதிலும் விளம்பரப்படுத்துவதிலும் மோடிக்கும் மோடி அரசுக்கும் அலாதி பெறுமை அடவு கட்டி ஆடும்.

 நடுத்தர குடும்பங்கள் தாங்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வேண்டும் இவர்கள். இந்த பகட்டு அரசுக்கு எதுக்கு 620 மில்லியன் டாலர் சோலார் மானியம்.

மோடி அரசுக்கு உலக வங்கி வழங்கி இருக்கும் மானியம்

World Bank approves $625-million aid for India's solar programme

இவனுங்க வாங்கினா உதவி நடுதர மக்கள் வாங்கினா மானியமா.

உள்ளே உள்ள செய்தியை பார்த்தால் இந்த உதவி யாருக்குக்கொடுக்கப்படும் என்று எழுதி இருக்கிறது என்று பாருங்கள், இந்த மானியம் யாருக்கு என்று புரியும்.

இந்த தொழில் நுட்பத்தில் முன் அனுபவமும், தொழில் நடத்தும் அளவிற்கு பணவளமும் இருப்போருக்கு மட்டுமே இந்த மானியமும் முதலீட்டு தொகையும் கொடுக்கப்படும் என்று சொல்லி இருப்பதும். தமிழக முதல்வரை அதானி குழுமம் வந்து சந்தித்து இருப்பதையும் இணைத்து பாருங்கள் செய்தி விளங்கும்.

வெட்கம் கெட்ட மோடி அரசு இந்த மானங்கெட்ட அரசின் பசப்பு வார்த்தைகளை நம்பி 1 கோடு நல்ல மக்கள் வஞ்சிக்ப்பட்டு விட்டார்களே என்ன செய்ய.

0 comments: