Tuesday, July 12, 2016

நாட்டு நடப்பே தெரியாத விசயகாந்து ஐயோ பாவம் - சீர்திருத்த பள்ளி

1988ல் சலாம் பாம்பே என்று ஒரு படம் வந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்தப்படம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பாம்பாய் ஓடி வந்து வாழ்க்கையை தொலைத்த ஒரு சிறுவனின் கதை. சமீபத்தில் கூட இந்த கதையை அழகாக மெழுகேத்தி சிலம் டாக்கு மில்லினர் என்று ஆசுகர் வாங்கிய கதையும் உண்டு.

திரைதுறையை சேர்ந்த இவருக்கு சிறார் சீர்திருத்த பள்ளி எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரியாதாம். சீரழிக்கும் பள்ளியா என்று கேட்கிறார் அப்பாவி போல்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற வழக்கு இன்றைக்கும் அன்றாடம் நாம் பார்க்கும் காட்சிகள்.

அதனால் தான் சின்ன பிள்ளைகளை இதை பார்க்காதே படிக்காதே என்று சட்டமும் கொண்டு அடக்கி வைத்துள்ளார்கள். இளம் கன்று பயம் அறியாது, பயம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் தான் செய்யப்போகும் செயலால் தனது வாழ்க்கையும் அடுத்தவர் வாழ்க்கையும் எந்த நிலைக்கு தள்ளப்படும் வயது இல்லாத பிள்ளைகளை வீட்டுலேயே கட்டுப்படுத்தியும் கண்டித்தும் வளர்க்க வேண்டும் என்றது ஊர் அறிந்த உண்மை.

மற்ற நாடுகளை விடுவோம் இந்தியாவில் குற்றமும் தண்டனை என்று கிடையாது. குற்றமும் குற்றம் புரிந்தவனின் பின்னணியும் என்று தான் இருக்கிறது.

கொலையே ஆனாலும் 100 கோடி ரூவா படம் வீணாய் போகும், தேசபக்தி படத்துல எல்லாம் நடிச்சி இருக்கார்ன்னு சொல்லிகிட்டு வெளியில வந்து தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும் என்று கையை ஆட்டி ஆட்டி வசனம் பேசலாம்.

ஆனால் இப்படி பின்னணி இல்லை என்றால் அடுத்தவன் செய்த கொலைக்கு கூட தான் பலிகடாவாக்கப்படுவதை எவனாலும் தடுக்க முடியாது இந்தியாவில்.

கோபத்திலும் ஆத்திரத்திலும் அறியாமல் செய்த தவறு வருந்தி திருந்தும் இடம் தான் சிறையும் சீர்திருத்த பள்ளியும். ஆனால் அங்கு செல்பவர்களை எப்படி நடத்துகிறார்கள்.

சட்டம் என்ன எல்லாம் சொல்கிறதோ அவைகளுக்கு நேர் எதிர்மாறாக நடந்து அந்த சிறார்களையும் கைதிகளையும் வெளி உலகுக்கே தகுதி இல்லாதவனாக தான் மாற்றிவிடுகிறது இந்திய சமூக அமைப்பு.

சட்டம் ஒரு தண்டனை கொடுத்தால் அதற்கு மேல் சமுதாயம் கொடுக்கும் தண்டனை அதைவிட கொடூரம்.

இவைகள் எல்லாம் தெரியாதது போல் ஐயா விசயகாந்து கேள்வி கேட்கிறார், எழுதி கொடுத்தவனை பிடித்து நாலு நல்லா நடு மண்டையில போடுங்க.............

0 comments: