Wednesday, July 13, 2016

பாமக, இராமதாசு மற்றும் அன்புமணி சாதியை தவிர வேறு எதை பற்றியும் பேசாதது ஏன்

July 12 2016
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

July 11,2016
இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து

July 09, 2016

ராம்குமாரை கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி: ராமதாஸ் கருத்து

July 06, 2016
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை மாறி வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு



Dec 6,2012
ஆமாம், நான் ஜாதி வெறியன்தான்... டாக்டர் ராமதாஸ் பரபரப்புப் பேச்சு


நாளிதழ்களையோ அல்லது வேறு இதழ்களையோ திரந்தால் இராமதாசோ, பாமகவோ அல்லது கையெழுத்து தான் போடுவேன் என்று சொல்லும் அன்புமணியாகட்டும் இவர்கள் வெளியிடும் கண்டனங்கள் ஆகட்டும், அறிவிப்புகள் ஆகட்டும் அனைத்துமே சாதியை சார்ந்தே இருப்பதேனோ தெரியவில்லை.

இந்த செய்திகளுக்கு நடுவில் பல கொலைகள் நடந்தது உண்டு, ஆனால் இவர்களோ இவர்களது இயக்கமோ சாதிய முக்கியத்துவம் பெறாத கொலைகளுக்கோ சச்சரவுகளுகோ எந்த முக்கியத்துவமும் கொடுப்பதே இல்லை.

இந்த சாதிய இயக்கம் தமிழகத்தை ஆளுவதற்கு ஏற்ற கட்சி என்று இராமதாசும் அவரது மகனும் மக்களுக்கு சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக்கூட சாதியின்றி பார்க்க முடியாத இந்த மனிதர்கள் தாம் மக்களை வழி நடத்தபோகும் தலைவர்கள் நம்புங்கள்.

50 ஆண்டு காலமாக முன்னோக்கி நகர்த்திகொண்டு வந்த மக்களை 200 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அடிமை காலத்துக்கு அல்லவா இவர்கள் நம்மை அழைத்து போக முற்படுகிறார்கள் இந்த தேசபக்தர்கள்.

தேர்தல் காலங்களில் எதிர் அணியினர்களை மாக்களாக மதித்தும் மிதித்தும் பேசிய இவர்களது பேச்சுகளை மக்கள் அறிவார்கள்.

எதற்கு எடுத்தாலும் வன்னியர்கள் என்று பேசும் இந்த மக்களால் எப்படி அடுத்தவர்ளோடு இணக்கமாக செயல்பட முடியும்.

அது மட்டும் இல்லாது சாதி வளையங்களை தொகுப்பதும், நாதியற்றவர்களை அடித்து கொல்லவும் தூண்டும் இவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள்.

இந்திய அரசியல் அமைப்பில் சாதிக்கு எதிராக உள்ள அனைத்து பிரிவுகளிலும் குற்ற நடவடிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டு வரும் இந்த சாதி இயக்கம் தான் தமிழகத்தையும் இந்தியாவையும் ஏன் அமெரிக்காவையும் ஆள பிறந்த மக்கள் மற்றும் இயக்கம்.

0 comments: