Thursday, July 14, 2016

இந்த முட்டாள் கணவருக்கு சட்டப்புலிகள் யாராவது உதவுங்களேன்..........

மணமுறிவு வழக்கில் தனது நேற்றைய  மனைவியும் என்னாள் பிள்ளை பராமரிப்புக்கும் பணம் கொடுக்க முடியாது என்று தொடுத்த வழக்கில், பெண்களை பொருளீட்ட சொல்வது இந்து மத தர்மங்களுக்கு எதிரானவை என்றும். மாதம் ரூ 5000 கைக்கும் வாயுக்கும் மட்டுமே சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் அந்த முட்டாள் நேற்றைய கணவரை கடிந்து இருக்கிறது.

சென்ற ஆண்டு இந்தியாவின் திட்ட ஆணையம் நாள் ஒன்றுக்கு ரூ22 இருந்தால் அவர் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அரசு கெசட்டில் கிடைக்கும். அந்த கெசட்டின் பிரதியையும் மேலும் நேற்றைய மனைவி வேலை பார்க்கவில்லை என்ற சாட்சியத்தின் அடிப்படையில் அவர் வேலை செய்யும் மத்திய/மாநில அரசு நிறுவனத்தின் மேலாளரை நீதிமன்ற அழைப்பு கட்டளையில் இணைத்து விசாரித்தால் இந்த தீர்ப்பு திருத்தப்படலாம்.

ஒரு நாளைக்கு ரூ22 என்றால் ரூ 682ல் அவரது வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகி விடுகின்றது, மீதம் இருக்கும் ரூ4312ல் அவர் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்றும் வாதிடலாம்.

நீதிமன்றத்தை பொருத்த அளவில் சாட்சிகளின் அடிப்படையில் தான் அனுகவேண்டு அன்றே உணர்வு பூர்வமாக இல்லை. என்ன இதை சொல்வது ஒரு மிகவும் புகழ் பெற்ற வக்கீலாக இருக்க வேண்டும் அவ்வளது தான். இருந்தாலும் இந்த வாதத்தை நிதிமன்றம் தன்னிச்சையாக புறம் தள்ளும் அதிகாரம் பொருந்தியது என்றதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏன்டாமக்கா கட்டும்போதே தெரியாதா பின்னாளில் வழக்கு அது இது என்று வரும் என்று........

0 comments: