Tuesday, February 20, 2018

இல்லை வெங்கையா நாய்டு நாட்டை கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் தான் விழா எடுக்கனும்

வெங்கையா நாய்டு அற்புதமான கேள்வியை கேட்டுள்ளார். எதற்கு எல்லாம் விழா எடுக்கலாம் கூடாது என்று வகுப்பெடுத்துள்ளார்.

மகாத்துமா கொன்றதை விழாவாகவும் கொலைபுரிந்தவனுக்கு நாடாளுமன்றத்தில் சிலையும் அவனது பெயரில் கோட்சாயிணம் எழுதவும் தயாராகிவருகிறது பாசக.

ஆதார் எண் என்ற ஒன்றை கண்டுபிடித்து விட்டதாகவும் அந்த எண் கடவுளின் எண் என்றும். அந்த எண் இல்லாதவர்களை சாக வேண்டும் என்று வீர வசனம் பேசி நடுநிசி விழா எடுத்தவர்கள் அல்லவா இந்த வெங்கையா நாய்டு சார்ந்த இயக்கம்.

வீதியில் நடமாவும் கூட இந்த எண் வேண்டும் இல்லாதவர்களை கொல்ல வேண்டும் என்று காவடி எடுத்த இயக்கம் இன்று சொல்கின்றது எது எதுக்கு விழா எடுக்க வேண்டும் என்று.

1,30,000 மக்களை 5 நாட்களில் குசராத்தில் விரட்டி விரட்டி கொன்றுவிட்டு, தான் தான் உலக மாகாத்துமா என்றும் காந்தி இல்லை என்று நாட்டுக்கு நாடு சென்று மாநாடு போட்ட இயக்கம் இன்று சொல்கின்றது எதுக்கு எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று.

வேண்டும் என்றால் சாப்பிடுங்களாம், நீங்கள் யாரய்யா கடவுளா அனுமதி எல்லாம் கொடுக்க. கொஞ்சம் விட்டா பரவாயில்லை வாழுங்கள் என்று சொல்வார்கள் போலும்.

0 comments: