Tuesday, February 20, 2018

2017 சல்லிக்கட்டை மீட்டுக்கொடுத்ததை போல் 2018ல் பாசக காவிரியை மீட்டு கொடுத்து இருக்கிறது

2017ல் நீங்க மட்டும் பாசகவை ஆட்சியில் உட்கார வைத்து இருந்தால் இன்நேரம் சல்லிக்கட்டை அப்படி விரல் நொடிக்கும் பொழுதில் கொண்டு வந்து இருப்போம் என்றது முதல். அவரச சட்டம் கொண்டு வரலாம், இல்லை மாடு காட்டு விலங்கானது போல் நாய் பன்றி பூனை என்று அனைத்தையும் காட்டு விலங்காக அறிக்கலாம் என்ற யோசனை வரை அள்ளி விட்டது எச்ச சர்மா, தமிழிசை, பொன்னார், மற்றும் நிர்மலா சித்தாராமனும்.

காவிரி ஆணையம் அமைக்க சொல்லி ஆண்டுகள் உருண்டோடியும் அமைக்க தேவை இல்லை அப்படி இப்படி என்று நயவஞ்சகமாக நிறுத்திவிட்டு இப்போது என்ன செய்வீர்கள். திராவிட கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது என்று பாசக நஞ்சை கக்குகிறது.

இதிலே தமிழ் பழமையான மொழியாம் பாசக கூவுகின்றது 11,600 கோடிக்கு கணக்கு கேட்பார்களே என்ற பயம். பயத்தில் உளறுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

தமிழகத்தை நய வஞ்சகமாக ஏமாற்றிய பாசகவை உடனடியாக தமிழக்தில் ஆட்சியில் அமர வைக்க வேண்டியது 'இந்துகளின்' கடமை, தமிழர்களின் கடமை இல்லை. அந்த 3% ஓட்டு கிடைக்காது என்று தமிழிசை மிரட்டியும் உள்ளார். பாவம் அவர்கள் வாக்கே அளிப்பதில்லை என்று தமிழிசைக்கு தெரியாது போலும்........



0 comments: