Tuesday, February 13, 2018

பாசகவின் நீட் தேர்வுக்கு தீர்வாக இப்படி செய்யலாமா

எறும்பு கட்டும் புற்றில் பாம்பு வந்து குடியேறுவது போல், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை கட்டுவோமாம். அந்த கல்லூரிகளின் உருவாக்கதிற்கும் செலவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத பாசக அரசு மருத்துவ கல்லூரியில் யார் யார் எல்லாம் படிக்க வேண்டும் என்று முடிவு எடுப்பார்களாம்.

சரி அவர்கள் சொல்வது போல் முடிவு எடுக்கட்டும் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம், கல்லூரி அமைந்து இருக்கும் இடத்திற்கு சம்பந்தம் இல்லாமல் சேர்க்கைக்கு அறிவிக்கப்படும் ஒவ்வொரு மாணவரின் சேர்க்கைக்கும் அந்த அந்த கல்லூரிக்கு 1 கோடி ரூபாய் மைய அரசு கொடுக்க வேண்டும்.

ஆண்டு ஒன்றுக்கு கிட்ட தட்ட 5000 மாணவர்களின் சேர்கையையும் மைய அரசு வடக்கில் இருக்கும் மாணவர்களுக்கு தாரைவார்க்க நினைக்கும் போது 5000 கோடி பணத்தை அந்த கல்லூரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கொடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த ஈத்தர கல்லூரியில் சேர்க்க 1 கோடி ரூபாய் அதிகம் என்று பாசக அரசு நினைத்தால் பாசக அரசை வேண்டும் அளவிற்கு அவர்களது செலவில் மருத்துவ கல்லூரிகளை கட்டி கொள்ள சொல்லுங்கள்.

வடக்கில் இருக்கும் மாணவர்கள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருடத்திற்கு $50,000 பணத்தை கட்டி படிக்க வைக்க முடியும் போது தமிழகத்தின் மருத்துவ கல்லூரிகளிலும் அதே தொகையை நீட் அடிப்படையில் சேர்க்கும் போது வசூலிக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்ற வேண்டும். சிந்திப்பார்களா தமிழக அரசியல்வாதிகள்.

0 comments: