Monday, February 12, 2018

பாசக - நீங்களும் நாளைய இந்தியாவின் நிதி அமைச்சர் ஆகலாம்

இந்தியாவை ஆள திறமை எல்லாம் இருக்கவேண்டும் என்ற அவசியமோ அறிவோ தேவை இல்லை. இமாலய பொய்களை சொல்லியே ஆட்சியையும் பிடிக்கலாம். பிடித்த பிறகு பொய் பொய்யாக சொல்லியே ஆண்டுகளையும் கடைசி வரை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது பாசக.

ஆட்சியில் இல்லாத போது படித்த இளைஞருக்கு வேலை இல்லையே என்று நீலிக்கண்ணீர் வடித்த பாசக, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும். சாப்பிட சாப்பாடு இல்லை என்றால் பீட்சா சாப்பிடுங்கள் என்று ஆணவம் பேசுகின்றது.

ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவோம் என்று பிரச்சாரம் பேசிய பாசக கடைசியில் அந்த இளைஞர்களை பக்கோடா செய்து விற்று பிழைப்பை பார்க்கும்படி மிகவும் பணிவுடனும் அன்புடனும் ஆணையிடுகின்றது.

ஒரு காலத்தில் வங்காள நாட்டின் ஏழ்மையை குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டது. அந்த சுய உதவி குழுக்கள் அரசு சாரா இயக்களின் மக்கள் உதவி குழு. வெளிநாட்டு வாழ் மக்களின் நன்கொடைகளை கொண்டு ஏழை நாடுகளின் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வண்ணம் செயல்பட்டு வந்த அரசு சாரா இயக்கம், 1999இல் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற இயக்கம்.

இப்படி தானாக இயங்கும் வெற்றி பெற்ற இயக்கங்களுக்கு பிரதான மந்திரி மூத்திர திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும். அவர்கள் ஏற்கனவே செய்யும் அதே வேலையை அவர்கள் செய்வார்கள் ஆனால் பெயரை மட்டும் இந்தியில் வைத்து இது எங்களது அபார மூளையில் உதித்த ஒரு உத்தம திட்டம். இது இந்தியாவுக்கான திட்டம் இல்லை ஈரேழு 14 லோகத்துக்கும் உண்டான திட்டம், இது போல் ஒரு திட்டத்தை உலகம் இது வரையில் கண்டது இல்லை. ஆகவே இளைஞர்கள் எல்லாம் பக்கோடா விற்று வாழ்க்கையை நடத்திக்கொள்ளுங்கள் என்று மிகவும் தைரியமாக மேடையிட்டு முழங்கலாம்.

அதிமுகவின் சி பொன்னையனின் திட்டங்களான அரசு ஊழியர்களின் பணி நிறைவு பிடித்த பணத்தை கொடுக்காமல் மீதம் இருக்கும் 5 ஆண்டுகளும் அந்த பணத்திலேயே மஞ்சள் குளிக்கலாம் என்ற அறிவு கெட்ட திட்டங்கள் போல் திட்டங்கள் தீட்டி இது போல் ஈரேழு 14 லோகங்களும் இந்த 1 இலட்சம் ஆண்டுகளிலில் உலகம் கண்டது இல்லை என்று பெருமை பேசலாம்.

நீங்களாகவே கண்டுபிடித்து இயக்கும் வியாபாரங்களை நாளை பாசகவின் பிரதான் மந்திரி அந்த யோசனா என்று முன்னும் பின்னும் இணைத்து அபார திட்டம் ஆகா திட்டம் ஓகோ திட்டம் என்று முண்டா சட்டைக்காரர்கள் புகழ்ந்து இந்தியில் பேசிக்கொண்டு சிரிப்பார்கள்.

0 comments: