Saturday, July 1, 2017

எத்தனை முறை அடி வாங்கினாலும் திருந்தாத ப சிதம்பரம்

சென்ற முறை நடத்திய நல்லிரவு மசாலாவை பற்றி விமர்சித்த சிதம்பரத்தையும் அவரது மகனையும் படாதபாடு படுத்தியது இந்த பிரிவினைவாத பாசக அரசு. இவ்வளவு வாங்கியும் ஒரு வரி அமலுக்கு வந்த முதல் நாளே விமர்சிக்கின்றார்.

தமிழக அரசை பாருங்கள் கை வாய் பொத்தி இன்னமும் குனிந்தே இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது கற்றுக்கொள்ள கூடாதா.

வீட்டில் இருக்கும் சின்ன குழந்தை ஒரு சிறு பொம்மையை எடுத்து அடுத்த இடத்தில் வைக்கும், உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த குழந்தையை பார்த்து அட இங்க பாரேன் எவ்வளவு பெரிய பொருளை எடுத்து அங்க வச்சிடான் என்று புகழுவார்கள், அவரை தொடர்ந்து வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த குழந்தையை தூக்கு அந்த அற்ப காரியத்திற்கு முத்தம் கொடுப்பது முதல் இன்னும் என்ன என்ன எல்லாம் கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.

அது போல இருக்கிறது இந்த பிரிவினைவாத பாசக அரசு செயல், ஒரு அற்ப அறிவிப்பு அதை தெரிவித்துவிட்டு போகவேண்டியது தானே, அதை என்னவோ சிறுபிள்ளையின் பொம்மை விளையாட்டை பெரியவர்கள் புகழ்வது போல் இவர்களே தம்பட்டம் அடிக்கிறார்கள். மேலும் உலகிலேயே முதன் முறையாக என்ற வசனம் வேறு அப்பப்பா இந்த பிரிவினைவாத சிறுகுழந்தை எப்போது தான் பெரிதாக வளருமோ. நாட்டு மக்களின் வரிப்பணம் என்றைக்கு தான் சரியான செலவுக்கு பயன்படுத்த படுமோ எப்போதுமே வெறும் தம்பட்டத்திற்கு மட்டும் எவ்வளவு தான் செலவு செய்வார்கள் இந்த தற்பெருமை ஆயோக்கியர்கள்.......

இவர்களின் அடிவருடி தனமலரில் 12வது பக்கத்தில் வந்து இருக்கிறது இந்த ஒரு வரி செய்தி. அவ்வளவு தான் மதிப்பு இந்த செய்திக்கு. இதற்கு ஏன் இவ்வளவு வெட்டி செலவு யோகம் தினம் அன்று ஒரு நாள் மட்டும் யோகம் செய்ய கோடி கோடியா கொட்டி அழித்தை போல்.........

0 comments: