Saturday, July 8, 2017

இந்திய பணத்தை இந்தியர்களே அவமானபடுத்தும் அவலம்

ஒவ்வொரு முறை கப்ப வசூல் ராசாக்கள் சளிக்காமல் மிச்சப்பணத்தில் ஒரே ஒரு 10 ரூபாய் நாயணயத்தையாவது வைத்துக்கொடுத்தாலும் வரும் அத்தனை மக்களும் உங்க நாணயம் வேணாம் தாளே கொடு என்று வாங்கி போகின்றார்கள்.

வங்கிகளிலோ 500ரூபாய் கட்டுகளை வாங்கிக்கொள்கிறீர்களா என்று கேட்டுவிட்டு கொடுக்கிறார்கள். 2000 தாளை வங்கியில் கொடுத்தாலும் சில்லரையாக கொடுங்கள் என்று வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.

எங்கே எந்த கடையில் எது வாங்கினாலும் பணமா கார்டா என்று கேட்கிறார்கள்.

GST வந்ததில் இருந்து விலை குறையும் என்று தான் சொன்னார்கள் ஆனால் உணவு விடுதியில் இருந்து திரைபடம் வரை ஏற்கனவே கொடுத்த விலைக்கு மேல் தான் கேட்கிறார்களே அன்றி குறைவாக இல்லை. இதிலே நொடிக்கு நூறு விளம்பரம் ஒரே நாடு ஒரே வரி என்று.....

யாரை யார் ஏமாற்றுகிறார்கள், கள்ளபணத்தை ஒழிப்பதாக சொல்லி இப்போது ஒரு பெரிய கள்ள சந்தையை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். விரைவில் மித்ரோன் என்று நள்ளிரவு மசாலாவுக்கு தயாராகுங்கள் மக்கா.....

0 comments: