Thursday, July 20, 2017

இன்றைகு புதிதாக பிறந்த ரௌடி இந்தியா - ஐயோ பாவம் இந்தியர்கள்

பாசகவின் வெற்றிகளை மோடி இப்படி தான் சொல்வார், ஒரு வரியை திருத்தி அமைத்தாலே இந்தியா இன்று புதிதாக பிறந்தது என்று சொல்லும் இவர்களால் மொத்த அதிகாரமும் கைக்கு வந்ததை எப்படி புதிய இந்தியா பிறந்தாக சொல்லாமல் இருக்க முடியும்.

ஏற்கனவே இருக்கும் அசுரபலத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆட்டி வைத்தார்கள் இந்த பிரிவினைவாத பாசகவினர், இனி என்ன என்ன எல்லாம் செய்யப்போகிறார்களோ.

பாசகவின் குடியரசு தலைவர் இனி வரிசையாக செய்யவிருக்கும் காரியங்கள் இவைகளாக இருக்கும்.

1) ஒத்து வராத மாநிலங்களை வருத்து எடுப்பது மற்றும் ஆட்சியை கலைப்பது

2) மதவாதமும் பிரிவினைவாதமும் பரப்பும் கலவரங்களும் கலவரகாரர்களும் இனி சட்டத்தின் துணையுடன் அதிக பாச்சலில் செயல்படுவார்கள்.

3) சிறுபான்மையினர்கள் வசிக்கும் இடங்களில் இனி அதிகமாக குண்டுகள் வெடிக்கும், சிறுபான்மையினர்கள் அதிக அளவில் கொல்லப்படுவார்கள்.

4) சமூக நீதிக்காக போராடுவோர்கள் மீது கருப்பு சட்டங்கள் பாய்ந்து 20 ஆண்டுகள் சிறையும், சரிவராத மக்களை கொத்து கொத்தாக கொல்ல துப்பாக்கி சூடுகள் நடத்தப்படும்.

5) ஒரு ஆணையில் இந்தியாவின் பணம் செல்லாது என்று சொன்னது போல் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இட ஒதுக்கீடு கலைப்படும்.

6) வாய் மொழி உத்தரவாக எல்லா மைய மற்றும் மாநில அரசு அலுவலகங்களிலும் சமூக பாகுபாடுகள் போற்றி வளர்க்கப்படும்.

7) அனைவரும் வழிபடும் கோவில்களில் இன்ன இன்ன நேரங்களில் இன்ன இன்ன மக்கள் தரிசிக்கலாம் என்று ஆரம்பித்து இன்ன இன்னவர்கள் இங்கே இருந்து தான் தரிசிக்க வேண்டும் என்ற வரைவரும், அதுவும் காசு கொடுத்தால் மட்டுமே என்றும் வரும்.

8) இராமர் பிறந்த இடம், வளர்ந்த இடம், சீதையை கொளுத்திய இடம் என்று ஊர் ஊராக நினைவிடங்கள் அமைத்து வழிபட தொடங்கப்படும்.

9) இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்படுவார்கள்.

10) மீதம் இருக்கும் 2 ஆண்டுகளும் இனி இந்தியா கலவர பூமியாக திகழும், இலங்கையில் நடந்தது போல் அதை எதிர்த்து அரவழியில் போராட வீதிக்கு செல்லுவோர் வீடு திரும்ப மாட்டார்கள்.

11) என்ன என்ன காரங்கள் சொல்லி எளியவர்களின் பணம் எல்லாம் பறிக்க முடியுமோ அவை அனைத்தையும் பறிக்கப்படும்.

12) தொகா விவாதங்களில் பேசும் வாதங்களுக்கு வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

13) பேச்சு உரிமை எழுத்து உரிமைகளை ஒரே இரவில் பொடா போன்ற சட்டங்களை கொண்டு மக்களின் குரல் நெறிக்கப்படும்.

14) கோயில்கள் மட்டும் இல்லை இனி எங்கேயும் இந்தியாவில் எளிய மக்கள் விரும்பும் உணவோ உடையோ அணிய முடியாது. யார் யார் என்ன என்ன உண்ண வேண்டும் உடுத்த வேண்டும் என்ற அட்டவணைகள் வெளியிடப்படும் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும்.

15) வடக்கு கோவில்களுக்கு செல்லும் இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது போல் திருப்பதி வரை இந்த தீவிரவாதம் நடக்கும்.

16) ஒரே இரவில் இந்த இந்த ஆதார் ஏண்கள் எல்லாம் இது இது எல்லாம் செய்யமுடியாது என்று படிப்படியாக உரிமைகள் பிடுங்கப்படும்.

17) மோடி எந்த நாட்டிற்கு எல்லாம் முதல் முதலில் சென்று நான் நான் என்று பேசினாரோ அந்த நாடுகளுக்கு குடியரசு அதிபர் சென்று அதே அறிக்கையை நான் நான் என்று முழங்குவார் அது மட்டும் இல்லாது காங்கிரசு அரசை அந்த அந்த வெளி நாடுகளில் வைத்து மோடிப்போல் இவரும் விமர்சனம் செய்வார்.

18) அதாணியும் அம்பாணியும் குடியரசு தலைவரும் கோல்பு விலையாட்டு விளையாடுவதாக அன்றாட செய்தகள் வரும்.

19) திருப்பதி முதல் கேதார்நாத்வரை தினமும் ஒரு கோவிலுக்கு இந்த குடியரசு தலைவர் செல்வார் எலிக்காப்டர்லில் சென்று தரிசித்துவிட்டு தான் தனது பணியை தொடருவார்.

20) பாசக அரசு அல்லாத மாநிலங்களில் அடிக்கடி இந்த குடியரசு தலைவர் வந்து போவார், கூட்டம் நடத்துவார்.

இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தும் தண்டல்காரனான இந்தியா இன்று பிறந்துவிடதே என்று வருந்துவோம். அதோடு மட்டும் இல்லை இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த ரௌடி இந்தியாவில் நடக்க இருக்கும் வன்முறைகளை கடவுளிடம் கூட சென்று முறையிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டீர்களே மக்கா அனுபவிங்க மக்கா நல்லா அனுபவிங்க. வெறு 15 இலட்சம் பணம் தருவதாக சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்டவர்களே பாருங்கள் உங்களின் பரிதாப நிலையை.......

0 comments: