Thursday, July 27, 2017

இந்தியா சீனா போர் வருமா வராதா

சமீப காலமாக செய்திகளில் இடம்பிடிக்கும் செய்தி இது. அதுவும் எப்படி 10 நாளைக்கு மேல் வெடி பொருட்கள் இருக்காது. சும்மா சீண்டிப்பார்க்காதே என்று சீனா அறிவித்து இருக்கிறது. சீன எல்லையில் பதற்றம். சீன அதிபரும் மோடியும் சீ20 மாநாட்டில் சந்தித்து பேசினார்கள், இல்லை பேசவில்லை......

ஆக மொத்தத்தில் சீனாவுடம் போருக்கு இந்தியா தயாராவது போல் ஒரு கண்ணோட்டம் செய்திகளில் உலா வருவரை கவனிக்கலாம்.

எந்த ஒரு சுதந்திர நாட்டின் செய்தி ஊடகங்களுக்கு தனது கணிப்பை செய்தியாக வெளியிட உரிமை உண்டு என்று வைத்துகொண்டாலும். தேச நலனுக்கு எதிராக எழுதும் பரப்பும் பரப்புகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. ஆனால அரசாங்க எதிர்ப்பு எதுவுமே எழாமலும் மறுப்புகள் எதுவும் எழாத வண்ணமாக நாளொருமேணியும் பொழுதொரு வண்ணமாக செய்திகள் வருவது மட்டும் நிறபாடில்லை.

ஆக இது திட்டம் இட்டு அரசால் பரப்ப படும் ஒரு போர் பற்றிய தகவல் என்று சந்தேகம இல்லாமல் தெளிவு பெறுகின்றது.

சரி அப்படி ஒரு போர் வர சாத்தியமா என்றும் அந்த செய்திகளை படித்து அப்பாவி மக்கள் பதற்றம் அடைவார்களா என்றால் அதுவும் இல்லை. பிறகு எதற்காக இந்த செய்தி பரப்ப படுகின்றது.

ஊழலை முழுவதும் ஒழித்துவிட்ட இந்தியா, தூய்மையான இந்தியா, கருப்பு பணம் என்ற பேச்சுக்கே இடமில்லாத இந்தியா, மேக் இன் இந்தியா, என்று ஏகப்பட்ட இந்தியாக்களை இந்தியர்களின் முன் மோடியும் அவரது கூட்டமும் அலையவிட்டு இருக்கிறது. அந்த இந்தியாக்களை இந்தியர்கள் இப்போது எங்கே என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தினம் மனம் போன போக்கில் ஒரு அறிவிப்பை புதிய இந்தியாவின் பிறப்பாக வெளியிடுவதும் அடுத்த நொடியே அந்த இந்தியா அநாதையாக தெருவில் திரிவதையும் மக்கள் பார்த்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

இது வரையில் மதத்தின் பெயராலும் சாதிகளின் பெயராலும் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதிலும், சமூக அவலங்களை கட்டவிழ்த்துவிடுவதுமாக தான் இந்த அரசு பயணிக்கின்றதே தவிர உருப்படியாக எதுவும் செய்துவிடவில்லை.

முன் எப்பவும் இல்லாத அளவிற்கு எல்லா வியாபாரங்களிலும் தனியார் பெருமுதலாளிகள் கொடிக்கட்டி பறக்கும் இந்த நாளிலா போர் வரப்போகின்றது. அப்படி போர் மூண்டால் இந்த முதலாளிகளின் முதலும் வியாபாரமும் போய் தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்று அந்த ஆட்களுக்கு தெரியாதா என்ன.

நாட்டின் எல்லைகள் போனாலும் தனது பணம் போய்விடக்கூடது என்று காப்பவர்கள் அல்லவா அந்த முதலாளிகள். அப்படி இருக்க சீனாவுடனான போர் இல்லை ஒரு எறும்பு கூட கூட போர் வர வாய்பு இல்லை.

பிறகு எதற்கு போர்பற்றி செய்திகள் பரப்ப வேண்டும், மிகவும் எளிதான கணிப்பு. ஒன்று மக்களை திசை திருப்ப மற்றும் இந்த போரை காரணம் காட்டி அமெரிக்கா முதல் இலங்கை வரை இந்த வல்லரசு இந்தியா ஆயுதம் வாங்கி குவிக்க தான். ஆயுதம் என்றால் நாட்டின் பாதுகாப்புக்கான ஆயுதங்கள் இல்லை மக்களே, அரசில் இருக்கும் மக்களின் தனிப்பட்ட தேவைக்கு தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கத்தான்.

மறுபடியும் மோடி இலங்கை முதல் அமெரிக்கா வரை சென்று முதன் முதலாக இலங்கையிடம் ஆயுதம் வாங்கிய இந்திய முதல் பிரதமர் நான் தான் என்றும், இதற்கு முன்னால் இருந்த காங்கிரசு அரசுக்கு இலங்கையிடம் எப்படி ஆயுதம் வாங்க வேண்டும் என்று தெரிய கூட இல்லை என்றும் சொல்லி செலிபி எடுப்பார் அந்த செல்பிமகான் மோடி. ஆகா ஓகோ என்று சங்களி சிங்கி அடைப்பார்கள் பார்க்கனுமே......

0 comments: