Saturday, July 22, 2017

ஒழுகுகின்ற வீடு அடுத்து மெழுகுவர்த்தி வெளிச்சதில படிச்சதா - இராம்நாத் கோவிந்து

கலாம் ஐயா எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் அதும் மட்டும் அல்லாது படிப்பும் ஆற்றலும் இருந்தால் நல்ல வேலை மட்டும் இல்லை நாட்டின் குடியரசு தலைவராக கூட ஆகலாம் என்று உதாரணமாக திகழ்பவர். இவருக்கு முன் அந்த பதவியில் அமர்ந்த ஆசிரியர் போல் இவரும் சொலித்தார்.

எளிமையான குடும்பம் என்றால் அவர்காலத்தில் மின் வசதி இருக்காது, பகட்டான ஆடை இருக்காது, மைல் கணக்கில் நடந்து தான் வருவார்கள் என்ற ஒரு நெடிய வரலாறு உண்டு.

இந்த நிலை எல்லாம் அவரின் இளமை காலத்தில் அவரது பெற்றோர்கள் இவரை பராமரித்து வாழ்ந்த காலத்தில். ஆனால் ஐயா கலாமை நாடு கண்டு வியந்தது அவரது எளிமையான பள்ளி காலத்தில் இல்லை. நாட்டின் குடியரசு தலைவரான பிறகும் அவர் கொண்ட எளிமையான வாழ்க்கைக்கு தான்.

குடியரசு தலைவராக ஆனாலும் தான் வகித்த அறிவியல் துறையில் நாடு இன்னும் எவ்வளவு தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது என்று திட்டமிட வழிவகுத்தவரும் இன்னும் என்ன என்ன பாதையில் இந்திய அறிவியல் துறையில் பயணிக்க வேண்டியுள்ளது என்றது மட்டும் இல்லாது இன்னும் நிறைய துறைகளில் அவரி அனுபவம் பயன்படுத்தப்பட்டது.

கலாம் ஐயா போற்றப்படுவது அவர் வாழ்ந்த அந்த அர்பணிப்பு வாழ்க்கைக்கு தான் என்று இராம்நாத் கோவிந்துக்கும் அவரை சார்ந்து இருக்கும் விளம்பர பிரியர்களுக்கும் இது புரியுமா என்று பார்ப்போம்.

மழையில் ஒழுகுகின்ற வீடு என்று இன்றைக்கு ஆரம்பித்து இருக்கும் இவர்கள் படிப்படியாக மெழுகுவர்த்தி வெளிச்சம், காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்தார், 2 சட்டை துணிமணிகள் தான் அவரிடம் உள்ளது(ஆனால் கோடிக்கணக்கில் விற்கும் கார் 20 உள்ளது), பல்கலைகழக விடுதியில் பகுதி நேர வேலைப்பார்த்து தான் சங்கபரிவாரங்களுக்கு சோறு வாங்கி கொடுத்தார் என்று எல்லாம் இனி எழுதும் முன் நினைத்து பாருங்கள்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல் ஆக்காதீர்கள் சங்கிகளே.......

இவர் என்ன தான் செய்தாலும் அப்துல் கலாம் ஐயா போல் போற்றவோ பாராட்டவோ பட போவதில்லை காரணம் இவர் வளர்ந்ததும் இருப்பதும் பாசக என்னும் நச்சு கூட்டத்தில். அந்த நஞ்சை உண்டு வளர்ந்தவரிட்டத்தில் அமிர்தமா விளையும்

0 comments: