Tuesday, July 4, 2017

காசுமீரில் இருக்கும் தீவிரவாத அமைப்பை என்ன செய்யனும்னு டிரம்பு சொல்லனுமாக்கும்

தனம் தினம் ஒரு புதிய இந்தியாவை பெத்து போட்டுட்டு மோடி ஊர் சுத்த போயிடுவாரு உதவாக்கரை அப்பன் மாதிரி, அந்த புதிய இந்தியாவில் அதுவும் வடக்கில் நாளுக்கு நாள் கொலைகளை நடப்பதை என்னவோ கத்திரிக்காய் விலை ஏறியது போல் மோடியும் பிரணாப்பு முகர்சியும் கண்டிகிறார்கள். ஏம்பா இனிமே கத்திரிக்கா விலை எல்லாம் ஏத்தாதீங்கப்பான்னு சொல்வதை போல் இந்த கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாதாம். எவனெவன் கண்டுபிடிச்சு தூக்குல ஏத்துரத விட்டுப்புட்டு ஒப்புக்க முடியாது, மாட்டே அப்படி இப்படின்னு பசப்பு வார்த்தைகள்....

இதிலே அமெரிக்காவுல 1000 கார் படை சூழ ஊர்வலமா மோடி சென்றார்ன்னு சங்கிகளின் சிங்கி வேற. அப்பா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா யாராவது வந்து கொஞ்சம் கொசுவிரட்டி மருந்து அடிங்கப்பா.....

அமெரிக்காவின் காயலாங்கடையில் போட்டு வைத்து இருக்கும் பழைய மற்றும் எதுக்கும் உதவாத இராணுவ தளவாடங்களை அதி நவீன ஆயுதமாக இந்தியாவுக்கு சொல்லி ஒரு விலை போட்டு எடுத்துட்டு போ என்றதும். இதோ வருது பிரம்மாசு, அதோ வருது விசுனுசு, இங்கே பார் பசு, அங்கே பார் பசு சாணி என்று பழையபாடல்களை எல்லாம் பாடி வாங்கி வந்த கையோட காசுமீர போராளிகளிடம் இருந்து இப்படி ஒரு செய்தியை தலைப்பு செய்தியக......இன்றைய நாளிதழ்களில்.......

சென்ற முறை கார்கில் இதே பிரிவினைவாத பாசக ஆட்சியில் இந்த முறை எங்கேயோ, எப்படியோ போரின் பெயரை சொல்லி சிங்கி அடிப்பது, மா நிலங்கள் தோரும் வசூலிப்பது. பிறகு பிரம்மாசு விட்டோம் விசுனூசு விட்டோம்னு கதைவிடுரது துல்லிய தாக்குதல் மாதிரி. இது வரையில் பாக்கிட்தானத்தின் எந்த எல்லையில் எவ்வளவு தூரம் உள்ளே சென்று அடித்தார்கள் என்று தெளிவுபடுத்தவில்லை.

மோடியின் சம்பந்தி நாவாசு சரீப்பு கூட அப்படி எதுவும் நடந்தா விளையாட்டுக்கு கூட சொல்லவில்லை.

ஒன்றை நன்றாக புரிந்து கொள்வோம், ஒரு நாட்டின் இராணுவ எல்லைக்குள் இன்னொறு நாட்டின் இராணுவம் நுழையுமானால் போர் வெடிக்கும். என்னவோ இவனுங்க போனாங்களாம், அவனுங்க எல்லாம் பீடா சாப்பிட்டுகிட்டு தம்மடிச்சுகிட்டு இருந்தானுவனாம், இவனுங்க அடி அடி என்று அடித்தானுங்களாம் அவனுங்க வலிக்குது அப்புரம் அழுதுடுவேன்னு சொன்னாங்களாம் அதை உலகம் அங்கரிச்சுடிச்சுன்னு மோடி அவருக்கு அவரே நற்சான்றிதழ் கொடுத்துகிறார்.

முதல்ல அப்படி ஏதாவது நடந்தால் தானே கண்டிக்க அப்படி எதுவுமே நடக்காத போது கண்டிக்க மற்றவர்கள் எல்லாம் என்ன பாசகவை சேர்ந்தவர்களா என்ன.........

திருவாளர் மோடி போய் அடுத்த புதிய இந்தியாவை பெத்துக்க என்ன திட்டம் என்று அந்த ஆயோக்கியர்களை போய் கேளும் அதை விடுத்து சும்ம சிரிப்பு காட்டிக்கிட்டு......

0 comments: