Thursday, July 27, 2017

மோடியின் அடுத்த நள்ளிரவு தாக்குதல் - இட ஒதுகீடு செல்லாது

இராம்நாத்து கோவிந்தை முன்னிறுத்தியதில் இருந்து தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டியது இந்த துல்லிய தாக்குதான் அடுத்தது என்று.

இந்த முறை மோடிக்கு பதில் இராம் நாத்து கோவிந்து மக்களின் முன் தொகாவில் நள்ளிரவில் தோன்றி நாளை முதல் இட ஒதுகீட்டு செல்லாது என்று அறிவிப்பதோடு சமூகத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகளை களைந்து இன்று முதல் ஒரு புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ஒரு சங்கை ஒலிப்பார்.

மோடி, அமித்து சா, அருண் செட்லி எல்லாம் இலட்டு கொடுத்து கொண்டாடுவார்கள்.

கலாம் குடியரசு தலைவராக தேவைப்பட்டது முசுலீம்களை கொன்று குவிக்கும் போது, இப்போது இடஒதுகீட்டை அழிக்க இராம்நாத்து கோவிந்து தேவைபடுகிறார்.

சங்கிகளுக்கு கொண்டாட்டமே ஆனால் பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்வார்கள், நெடுவாசலிலும், நீட் தேர்விலும் என்ன நடந்ததோ அதே தான் இங்கேயும் நடக்கும்.

இணைய புலிகள் கொஞ்சம் பாய்வார்கள், வளர்மதி திருமுருகனை போல் இன்னும் இருக்கும் களப்போராளிகளை கைது செய்தது போல் கைது நடந்தால் அடங்கிப்போவார்கள்.

பிறகு இடஒதுகீட்டை ஒழித்ததின் மூலம் ஒரே இந்தியாவை பெற்றோம் இனி யாரும் நம்மை சமூக ரீதியில் பாகுபடுத்தி பேச மாட்டார்கள் என்று மேடைக்கு மேடை மோடியும் அவரது சங்கிகளும் அடவுகட்டி ஆடுவார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்போர் எல்லாம் தேசதுரோகியாக அறியப்பட்டு உங்களது வீட்டு வாசலிலே தூக்கிலிட்டு கொல்லப்படுவீர்கள்.

பழையபடி பாசக சாதி இருக்கும் ஆனால் சமூக பாகுபாடு இருக்காது என்று உளருவார்கள்.

பிறகு என்ன மெல்ல இட்லர் மற்றும் இலங்கை வழியில் மக்களை சட்டங்களின் பெயரில் பிரிப்பார்கள், நேரே கொண்டு சென்று தனிமைபடுத்துவார்கள், பிறகு பட்டி பட்டியாக கொன்று குவிப்பார்கள். கேட்டால் ஒரு நாட்டிற்காக ஒரு மாநிலத்தையே இழக்கலாம் என்று உங்கள் மகாத்துமா காந்தியே சொல்லி இருக்கிறார். ஆகவே இது காங்கிரசு செய்ய இருந்தது தான் ஆகையால் யாரும் கூவ வேண்டாம் என்று வியாக்கியானம் பேசுவார்கள்.

2 comments:

')) said...

கேனப்பய ஊர்ல கிறுக்கு பய நாட்டாமையாம்

')) said...

சத்தியமா அப்படி ஒன்னுமே திட்டத்தில் இல்லை என்று கற்பூரம் அனைத்து சதியம் செய்வார்கள் தோழி, பிறகு இல்ல அழகா சிரித்து காட்டுவார்கள் ஏமாந்தியா என்று சொல்லி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி