Wednesday, July 5, 2017

இன்னும் ஒரு கோத்ரா இரயிலை கொளுத்த பாசக தயாராகிவிட்டது - சங்கிகளின் சிங்கிகள் ஆர்ப்பரிக்கிறது

சென்னையை சேர்ந்தவர் வசூலித்த மற்றும் அவரது பங்காக என்று மொத்தம் 5.65 இலட்ச ரூபாயை ஐஎசு இயக்கத்திற்கு இராணுவ தளபாடங்களையும் அதி நவீன ஆயுதங்களையும் செயற்கை கோள்களையும் வாங்கி குவிக்க பணம் கொடுத்து உதவினார் என்ற செய்தியும் அதற்காக கைது செய்யப்பட்டதாகவும் இன்றைய செய்தி.

கூடவே இந்த 5.65 இலட்ச ரூபாயில் 65 ஆயிரம் ரூபாயில் பல பேர் சேர்ந்து திரட்டியதாகவும், அந்த நபர்களை எல்லாம் கண்டறிந்து தக்க தண்டனையையும், இன்னமும் எவ்வளவு சில்லரை காசுகளை அவர்கள் நன்கொடையாக வசூலித்தார்கள் என்றும் விசாரிப்பதாகவும் செய்தி.

என்னே ஒரு கொடுமை, சென்னை தேர்தலில் 90 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகளில் கொடுத்தாக சொல்லி தேர்தலையே நிறுத்தி வைத்தார்கள் 4 மாதங்கள் இருக்கும், அந்த 90 கோடி கொடுத்தவரையோ அல்லது அந்த பணம் எப்படி பெறப்பட்டது என்றடையோ கண்டுபிடிக்கவோ அல்லது கண்டுபிடிக்க வேண்டும் என்று கூட இது வரையில் ஒரு அறிக்கை பேருக்காவது வந்ததா என்றால் இல்லை.

இது வரையில் காசுமீரத்தல் மட்டுமே மிதந்து வந்த இந்த இசுலாமிய தீவிரவாதம் இப்போது தமிழகத்தின் சில்லரை காசு வசூலித்தாக கைதில் வந்து நிற்கிறது.

மோடி அமெரிக்கா செல்கிறார் திரும்பியவுடன் காசுமீர போராளிகள் தாக்குதல் நடத்துவோம் என்ற கொக்கரிப்பு அதை தொடர்ந்து சில்லரை காசு வசூலித்தாக கைத்து, இந்த அழகில் நேற்று இசுரேலுக்கு 56 இன்சு மார்பன் பயணம் வேறு. 70 ஆண்டுகளாக காத்துக்கிடந்தாக இசுரேல் பிரதமர் சொன்னதாக தகவல் செய்தி தாள்களில்.

வரப்பின் மேல் வாயை வைத்து தேய்கிறார்கள் பாசகவினர், 3 ஆண்டுகளில் காசுமீரம் தவிர மற்ற இடங்களில் இது வரையில் ஒரு பட்டாசு கூட வெடித்தது இல்லை, அந்த ஆற்றாமைக்காக பாசக அரசு வரப்பின் மேல் வாய் வைத்து தேய்த்து பார்க்கிறது.

ஒரு வெங்காயமும் நடக்கப்போவது இல்லை, எவ்வளவு தான் வம்பிழுத்தாலும் ஆவப்போவது ஒன்றும் இல்லை. மறுபடியும் வயதான முதியவர்களை பாசகவே சபர்மதி இரயில் வண்டியில் வைத்து கொளுத்தியது போல் கொளுத்தினால் தான் உண்டு.

0 comments: