Friday, December 27, 2013

என்றென்றும் புன்னகை - அகமதும் சாக்கி அண்ணனும் நண்பர்கள் போலும்

தமிழில் லவ்லி என்று ஒரு படம் ஒன்று உண்டு, அந்த படத்தை பார்க்கும் போது அடுத்த என்ன என்ன நடக்க போகிறது என்று வசனத்துடன் ஊகிக்க கூடிய அளவிற்கு ஒரு படம். அந்த அளவிற்கு இந்த வருடத்தில் நம்மை ஏமாற்றிய படம் இந்த என்றென்றும் புன்னகை.

காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகின்றது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டு பயணம் முடித்து திரிசாவை யார் என்று கேட்டதற்கு தெரியாது என்று சொல்லும் காட்சிகள் தொடர்பே இல்லாமல் மாறி மாறி நம்மை இம்சைபடுத்துவதை பார்க்க முடியும்.

திரிசாவை பொருத்த அளவில் அவருக்கு மன்மத அம்பு உட்பட சமீபத்திய படங்கள் சரியாகவே அமையவில்லை. விண்ணை தாண்டி வருவாயாவில் பார்த்த திரிசாவை மீண்டும் பார்பதற்கு இல்லாமல் போவது வருத்தமே.

சீவாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் பாகம் இரண்டு போல் இருக்கிறது. எதற்கு தான் அப்படி செய்கிறார் படத்தில் என்று அவரும் அவரது இயக்குனரும் சொன்னால் தான் உண்டு.

சில படங்களை பார்க்கும் போது தான் ஒரு படத்திற்கு இயக்குனர் எவ்வளவு அவசியம் ஆகிறார் என்று தெரியும், அது இந்த படத்திற்கு சால பொருந்தும்.

சாக்கி அண்ணாவை ஒரு பொது விமர்சகர் என்று தான் இதுவரை நினைத்து இருந்தேன் ஆனால் அவர் இப்படி பாராபட்சமாக எழுதுவார் என்று நினைக்க இல்லை. உங்கள் விமர்சனம் நேர் எதிராக அமைந்துள்ளது......................

இனியாவது நல்ல படங்களை திரிசா தேர்ந்து எடுத்து நடிப்பார் என்று நம்புவோமாக........

பாடல்கள் எல்லாம் ஏதோ பாடல் வருகிறது என்று தெரிகின்றது ஆனால் என்ன பாட்டு என்று கேட்டால் ஏதோ பாட்டு என்று தான் சொல்லும் அளவிற்கு இருக்கிறது அந்த சூன் போனால் சூலை காற்றே பாடலை தவிர என்ன ஆச்சு ஆரிசு செயராச்சுக்கு, நல்லா தானே மெட்டு போட்டுகிட்டு இருந்தார்.............

0 comments: