Saturday, October 19, 2013

தி காஞ்சூரிங்கு ( The Conjuring )-- தமிழும் ஆங்கிலமும் திரைவிமர்சனம்


சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியாகி வெற்றிகரமாக பொருளீட்டிய படம் இது. 1970களின் கதைகளை சமீபத்தில் ஆலியுட்டு அதிகம் படமாக்குகிறது. அதுவும் பேய் படங்களில் இவைகள் அதிகம். காரணம் அறிவியலின் வீச்சில் காலப்போக்கில் இந்த வகை கதைகளும் அருகிபோனது காரணமாக இருக்கலாம்.

வெளி உலக மனிதர்களின் படங்களுக்கு என்ற ஒரு நாயகி இருக்கிறார் சிங்கோர்னி வீவியர். அனேகமாக எல்லா வெளி உலக மனிதர்களின் படங்களில் இவர் இல்லாமல் பார்க்க முடியாது.

அது போல இப்போது இந்த பேய் படங்களுக்கு என்று ஒரு நாயகியை பிடித்தி இருக்கிறார்கள் வேரா பிளமிங்கா. மிக சரியாக பொருந்துகிறார் அந்த வேடங்களில். அவரது கண்களில் வெளிப்படும் மிரட்சியும் வசனம் பேசும் விதமும் பார்பவர்களை அந்த பாத்திரத்தின் மீது பரிதாபமமும் அவருடன் நமக்கும் அந்த பயம் தொற்றி கொள்ளும் அளவிற்கும் இருக்கிறது.

முதல் முதலில் இவரது நடிப்பில் வெளியான ஆர்பன் படத்தில் அசத்தி இருப்பார். அதே அசத்தலில் இந்த படமும். அருமையாக நடித்து இருக்கிறார் வேரா.

அமெரிக்காவில் அன்று தொட்டு இன்று வரைக்கும் வாழையடி வாழையாக சொல்லும் சொல்லும் செய்திகள் இவைகள். ஒன்று ஆனாதை விடுதியில் இருந்து பிள்ளைகளை எடுத்து வளர்க்காதீர்கள் என்றும். வீட்டு கடன் கட்ட முடியாமல் வங்கிக்கு கொடுத்த சொத்துகளை வாங்காதீர்கள் என்ற இரண்டும். இவைகளில் வேரா ஏற்கனவே ஆர்பன் படத்தில் ஆனாதை இல்லத்தில் இருந்து பெண்ணை எடுத்து வளர்க்க முடிவெடுத்து முயலும் போது என்ன என்ன தொல்லைகளை சந்தித்தார்கள் என்று சித்தரித்து காட்டியது ஆர்பன் படம்.

இப்போது வீட்டை அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது என்று பேய் கொண்ட வீடு என்று தெரியாமல் அடிமாட்டு விலைக்கு கிடைகிறது என்று ஒரு நடுதர குடும்பம் தனது 5 பெண்பிள்ளைகளுடன் அந்த வீட்டிற்கு குடியேறிய உடன் நடக்கும் பேயாட்டங்களை படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

இந்த கதை உண்மை கதையின் பின்னணியில் எழுதி எடுத்தது என்றும், வேரா நடித்த அந்த பாத்திரம் இன்றும் இருக்கிறார்கள் என்றும் கடைசியில் காட்டுகிறார்கள்.

படத்தின் பலம் திரைகதை மற்றும் இசையாக இருந்தாலும், அந்த கடைசி காட்சியில் வேரா பேசும் வசனங்கள் தான் மிகவும் முக்கியமாக அமைத்து இருந்தது. ஏனோ அவைகளை தமிழ் பிரதியில் அவசரத்திற்கு கிண்டிய உப்புமாவாக ஆக்கிவைத்துள்ளார்கள்.

பேய்யின் ஆக்கிரமிப்பில் ஆட்கொள்ளும் மனிதனின் மனம் அதற்கு முழு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றது தான் இந்த பேய் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனோவசியமும் அப்படி தான் என்று சொல்கிறார்கள். அப்படி அந்த சூனியகாரியின் பேய் அந்த ஏழை தாயின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆகிரமித்து. கடைசியில் ஆட்கொண்டு மகளை கொல்ல தூண்டும் அந்த காட்சியில் வேரா அந்த தாயின் அதி மகிழ்ச்சி தருணங்களை தொடர்ச்சியாக பேசி தாயின் மனதை நல்ல வழிக்கு திருப்பும் தருணங்களை அவசரத்தில் கிண்டிய உப்புமாகாக மொழிபெயர்த்தும் பேசியும் உள்ளார்கள் தமிழில்.

மேலும் குழந்தைகள் பேசும் வசனங்களை பெரியவர்கள் கடினப்பட்டு சிறுமியாக பேசி இருப்பது இரசிக்கும் படியாக தமிழில் இல்லை.

ஒரு நல்ல பேய்படம் அந்த படத்தை இப்படியா ஒப்புக்கு சப்பாணியாக மொழிபெயர்கனும்.............

0 comments: