Saturday, May 18, 2013

பாலாவுக்கு செயமோகன் மோல் உள்ள கோபம் - பரதேசியாக

பரதேசி படத்தை பார்க்கத்துவங்கியதுமே சம்பவங்கள் எல்லாம் எங்கேயோ பார்த்தவைகளாகவே இருக்கிறதே என்று தான் தோன்றியது.

அதுவும் குறிப்பாக தேயிலை தோட்டத்திற்கு ஆள் எடுக்கும் காட்சியில் இருந்து மக்கள் தேயிலை தோட்டத்தில் தங்க வைக்கும் இடத்தை பார்க்கும் காட்சிகளும் சரி, அதன் பிறகு வேலையில் நடத்தப்படும் கொடுமைகளும் சரி அப்படியே அங்காடி தெருவில் பார்த்தை போல் இருக்கிறது.

சொகுசானவர்களின் வசதியான வாழ்க்கை ஆடம்பர தேவைக்கு வசதியற்ற வரியவர்களின் வாழ்க்கை பலிகொடுக்கப்படுகின்றது என்ற கதை தான் இரண்டுமே.

அந்த சோகம் நிறைந்த கதையுனுள் ஒரு அழகான மற்றும் ஆழமான காதலை கலந்து கொடுக்கும் திரைகதையாக இரண்டும் அமைத்து இருக்கிறார்கள்.

அங்காடி தெருவில் நாயகியின் கால் போகும், பரதேசியிலோ நாயகனின் கால் நரம்புகள் வெட்டப்படும்.

அ தெ வில் தைரியம் நிறைந்த பெண்ணாக குடும்ப சுமையை சுமக்கும் பெண்ணாக அஞ்சலி தோன்றுவார், பரதேசியில் அவைகள் இரண்டையும் இரு பெண்களாக பாலா அமைத்துள்ளார்.

இரண்டு படத்திலும் காதலில் சிக்கி படாத பாடு படுவார்கள் இப்படி காட்சிக்கு காட்சி, பாத்திரத்திற்கு பாத்திரம் விவாதித்துக்கொண்டே போகலாம்.

அங்காடி தெருவை பார்த்தபோது பாலாவிற்கு தோன்றி இருக்கும் அடடா இந்த கதையை விட்டுவிட்டோமே என்று. செயமோகன் இப்படி ஒரு நல்ல கதையை இசுபானிசு(Spanish) மொழியில் The Perfect Crime படத்தில் இருந்து எடுத்து அழகாக தமிழக கதையாக கொடுத்ததும், அதை வசந்த பாலன் அருமையாக இயக்கியதும் பார்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதே கதையையும் கருத்தையும் பரதேசியாக கொடுத்து இருக்கிறார் போலும்.

http://www.imdb.com/title/tt0395125/



1 comments:

Anonymous said...

angadi theru padam partha mind set la parkathinga.....review panrathu easy...