Monday, October 7, 2013

6 மெழுகுவர்த்திகள் -- திரைவிமர்சனம் -- The Changeling

ஆங்கிலப்படத்தை பார்த்து அச்சுபிசக்காமல் எடுக்கும் காலம் போலும் இது.

என்ன கதையில் சிற்சில மாற்றங்கள் மற்றபடி கதை அப்படியே மூலகதை.

ஆங்கிலத்தில் ஏஞ்சலீன தமிழில் சாம் அவ்வளவு தான் வித்தியாசம்.

ஏன்ஞலீனாவின் கணவன் ஓடிவிட்டதாக காட்டுவார்கள், சாமின் மனைவி வந்துடுங்க இன்னமும் எத்தனை பிள்ளை வேண்டும் என்றாலும் பெற்று தருகிறேன் என்று அதற்கு ஈடாக சொல்லுவார்....

ஆங்கிலத்தில் அந்த வயது சிறுவர்களை கடத்தி துன்புறுத்தி கொலைசெய்வதில் அவனுக்கு ஒரு அலாதி இன்பம், இது உண்மையில் நடந்த கதை அமெரிக்காவில்.

தமிழிலோ சிறுவர்களை கடத்தி பணம்பன்னுவது தொழிலாக காட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு அடிதடி நடைகை, அம்மாவாக நடிக்கும் காட்சிகளை மிகவும் அருமையாக காட்சியாக்கி இருப்ப்பார் ஈசுடுவுட்டு. குறிப்பாக அந்த புது பையம் அம்மா என்று விளிக்கையில் தட்டைவிட்டு எறிந்து பேசும் வசனங்களும் ஏஞ்சலீனாவிற்கு புதிது. சாம் பாவம் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் இவைகளுக்கு தமிழில்.

ஆங்கிலத்தில் தப்பித்த பையன் கடைசியில் தரும் நம்பிகையை தமிழில் வெற்றியாகவே காட்டியிருக்கிறார்கள்.

ஒரு வேளை ஆங்கிலத்தில் காட்டியது போல் இளம் பிள்ளைகளை கொண்டுவர்ந்து நறுக்கி கொல்லும் காட்சிகளை வைத்தால் அவைகளுக்கு அச்சாரமாக அமையுமோ என்று கதையை மாற்றி இருக்கலாம். இருந்தாலும் கதை எங்கு இருந்து எடுத்து ஆளப்பட்டது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.....

ஆங்கிலத்தில் மற்ற பையனை கொண்டு வந்து கொடுத்து இது தான் உனது பிள்ளை என்று சொன்னதற்கும். அப்படி மற்ற பிள்ளையை கொடுத்ததை நீதிமன்றம் சென்று சொல்வேண் என்று சொன்னதற்காக பைத்தியகாரியாக சித்தரித்து துன்புரியதற்கும் அந்த காவலரும் அவரது மேலதிகாரியையும் வீட்டிற்கு அனுப்பும் காட்சிகள் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சமூக விழிப்புணர்வுகு என்று படம் எடுத்தால் அவைகளில் இவைகளும் இருக்க வேண்டும். இல்லாமல் போனம் ஏமாற்றமே... என்ன தான் மோசமாக சமூகம் மாறி இருந்தாலும் அதிலும் நெஞ்சில் ஈரம் உள்ள மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எல்லா இடங்களிலும்.

0 comments: