Friday, June 7, 2013

After Earth - திரைவிமர்சனம்

இந்த படத்தின் முன்னோட்டம் படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது. அப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்பில் சென்றபடம் என்றதாலோ என்னவோ கொஞ்ச நேரத்திலே அலுப்பு தட்ட துவங்கிவிட்டது.

படத்தின் கதையும் சரி திரைக்கதையும் எளிதில் ஊகிக்ககூடியவைகளாகவே அமைந்து இருப்பது கொடுமை. படத்தின் பிரமாண்டம் என்றால் அது இசை மட்டுமே. அந்த இசைமட்டு இல்லாமல் இருந்து இருந்தால் படம் Star Warsசை தொலைக்காட்சியில் பார்த்தது போலாகி இருக்கும்.

கதை எங்கோ ஒரு வேற்று கிரகனத்தில் இருக்கும் ஒரு மனித குடியிருப்பின் வீரனின் குடும்ப விவகாரங்களை சொல்லும் படம். புவியிலிருந்து அங்கு சென்றார்களா என்று தெளிவாக சொல்லப்படவில்லை, ஆனால் அந்த வேற்றுகிரக மிருகத்தால் தாக்கப்பட்ட தனது குடும்பத்தின் மிச்ச மீதியோடு வாழும் வீரன், அந்த மிருகங்களை வேட்டையாடும் நாயகனாக வலம் வருகிறான்.

அவனுடைய மகன் காளைபருவத்திற்கு தயாராக இருக்கும் தருவாயில் படையில் அவனை இந்த ஆண்டு சேர்த்துக்கொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பும் தருவாயில் அவனது அப்பா நெடுநாளைக்கு பிறகு வீடு வருகிறார்.

வந்தவரிடம் தனது ஏமாற்றத்தை பகிர்ந்துகொள்ளும் சிறுவனுக்கு ஆருதல் மட்டுமே சொல்லும் தந்தை மேலும் ஏமாற்றம் தர நொந்து போகிறான்.

ஆருதலுக்காக அவனை உடன் அழைத்து செல்லும் தந்தை ஒரு விண்வெளி புயலில் மட்டி அவர்களது விண்களம் புவியில் விழுந்து நொருங்குகிறது.

புவியில் மனிதனை தவிர மற்ற விலங்குகள் இருப்பதாக காட்டுவது வித்தியாசமாக இருக்கிறது. மனிதனை மட்டுமே அழிக்கும் அந்த கொடிய விலங்கு அதிகம் இருக்கும் புவி என்று சொல்லும் கதையில் கடைசிவரையில் ஒரே ஒரு விலங்கை மட்டும் காட்டுவது ஏமாற்றமாக இருக்கிறது. பயத்தை மட்டுமே அறிந்துகொள்ள கூடிய விலங்கு மற்ற மனிதற்களை மரத்தில் மாட்டி மிரட்ட நினைப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை.

மேலும் இரவில் கடுங்குளிர் என்று சொல்வதும் முரணாக வெப்பவெளி விலங்குகளும் பறவைகளையும் காட்டுவது, ஆங்காங்கே இருக்கும் இரவு வெம்மை பகுதிகள் என்று சொல்லிவிட்டு ஒரு பள்ளத்தாக்கு முழுவதும் காட்டெருதுகளை காட்டுவதும் இரசிக்கும் படி இல்லை.

இப்படி கதையிலும் திரைகதையிலும் நிறைய கண்டுபிடித்து சொல்லும் வகையில் இந்த படம் ஒரு ஏமாற்றம். அதுவும் மனோச்சு சியாமளான் படமா என்று கேட்கும் அளவிற்கு பெயரை கொடுத்துகொள்ளும் அளவிற்கு சென்று இருக்கிறது படம்.

அடுத்த படத்திலாவது தனது முதல் படம் போல் மீண்டும் ஒரு படத்துடன் மீண்டு வருகிறாரா என்று காத்து இருப்போம்.

0 comments: