Monday, October 7, 2013

ஓநாயும் ஆட்டுகுட்டியும் -- குருதிபுனலும்

குபுவில் இல்லாத அம்சம் இந்த ஓஆவில் இருப்பது என்ன என்று பார்த்தால் அது இளையராசாவாத்தான்  இருக்கும்.

மற்றபடி ஒரு மர்ம கதையின் போக்கும் திரைக்கதையும் அழகாக அமைத்துள்ளார் இயக்குனர்.

என்ன முந்தைய 5 படங்களை பார்த்த நமக்கும் இந்த படமும் ஏதோ ஒரு ஆங்கபடத்தின் தழுவலாகவே இருக்கும் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம் எளிதில்.

அந்த சக்கிர நாற்காலி வில்லனையும் அந்த காட்டிக்கொடுக்கும் காவலனையும் தவிர்த்து இருந்தால் இத்த படம் தழுவலோ என்ற சந்தேகம் கூட வந்திருக்காது.

நிறைவாக அமைந்த படம் என்ன நிறைய நட்சத்திரங்கள் இருந்திருந்தால் சொலித்திருக்கும், இருந்தாலும் பரவாயில்லை என்று மக்கள் பார்கிறார்கள் போலும்.

சின்ன கதை அதை வைத்துக்கொண்டு 2:30 மணி நேரம் திரையில் காட்ட போகிறார்கள் என்றதும் அடுத்தது என்ன என்ன என்ற மர்மம் கடைசிவரையில் நீடிப்பது சுவாரிசியம்.

அப்படி எங்கே தான் சென்று தப்பிக்க போகிறார்கள் என்று யூகிக்க முடியாத முடிவு நிறைவான முடிவு.

இந்த இயக்குனரின் படங்களை பாராட்டி எழுதியதில்லை காரணம் மூலபடத்தின் வாசனை அப்படியே வருவதான். ஆனால் இந்த படத்தை அழகாக எழுதியிருக்கிறார் இயக்குனர்.

என்ன இளையராசாவின் அற்புதங்கள் இவரின் கதையோடு பார்வையாளர்களை ஒரு ஆட்டு ஆட்டி வைக்கிறது நமக்கே தெரியாமல். இராசா இராசா தான் உங்களை போல் இசைக்க இன்னமும் தமிழில் ஆள் இல்லை, பார்க்கலாம் ஏதும் படம் வருகிறதா என்று.....

குபுவை கமலும் அர்சுனும் விற்றுக்கொடுத்தார்கள், இந்த ஓஆவை மக்கள் விற்றுக்கொடுப்பார்களாக......

வாழ்த்துகள் மிசுகின், இன்னமும் இது போல் வசூலும் கூடிய படைப்புகளை கொடுக்க வேண்டுவோம்.

என்ன இவரது நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் சாரு ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் மௌனம் காத்துகொண்டு தான் இருக்கவேண்டிய நிலை பாவம் அவருக்கு.... பார்ப்போம் என்ன எழுதுகிறார் என்று.....

1 comments:

')) said...

ராசாவின் பின்னணி இசை காட்சியோடு ஒன்றாது வெறுப்பூட்டியது எனக்கு மட்டும் தானோ?