Friday, May 5, 2017

தமிழக மைல் கல்லில் உருது மொழியில் எழுத வேண்டும் - பாக்கிட்தான் ஓட்டுனர் என்ன பாவம் செய்தார்

தமிழகத்தில் இருக்கும் எல்லா மைல் கல்லிலும் இந்தியில் எழுதினால் தான் வடக்கு இருந்து வரும் ஓட்டுனர்கள் பார்த்து வண்டி ஓட்டி வருவார்களாம்.

வடக்க இருக்கும் ஓட்டுனர்களுக்கு இந்தி படிக்கவாது தெரியுமா என்று எல்லாம் யாரும் கேட்க்ககூடாது அப்படி கேட்டால் தேச துரோக பழி சுமத்தி இரவில் விசாரணை நடத்தி அதிகாலையில் உங்கள் வீட்டின் விட்டதிலேயே தொங்கவிடப்பட்டு இராணுவ வீரனை கேளுங்கள் என்று எச்சி ராசா சொல்வார் பரவாயில்லையா பார்த்துக்கொண்டு பிறகு கேள்வி கேளுங்கள்.

வடக்க இருந்து வரும் ஓட்டுனர்கள் என்று சொன்னால் வடக்கில் இருந்து இந்தி பேசும் மக்கள் மட்டுமா வருகிறார்கள். பாக்கிட்தானத்தில் இருந்து தமிழகம் வரும் ஓட்டுனர்கள் எல்லாம் எப்படி படிப்பார்கள். அதனால் இனிமேல் முதலில் உருது மொழியில் எழுத வேண்டும் பிறகு தமிழில் எழுத வேண்டும் பிறகு ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அதற்கு பிறகு இருக்கும் மிச்ச இடத்தில் இந்தியில் எழுதினால் போதும்.

எப்படியும் இந்திய அரசு தமிழகத்துக்கு என்று எதுவும் செய்வதாக இல்லை ஆகவே இனி எல்லா தேவைகளுக்கும் பாக்கிட்தானை நம்பி தான் தமிழகம் வாழப்போகின்றது. அப்படி இருக்கையில் அந்த பாக்கிட்தானின் ஓட்டுனர்கள் தமிழகம் வரும் போது படிக்க வசதியாக மைல் கல்கள் இருக்க வேண்டாமா. எவ்வளவு மை ஆகிவிடப்போகின்றது இந்திக்கு ஆகும் அளவில் இன்னும் ஒரு வீச்சு அவ்வளவு தானே.