Friday, May 5, 2017

அதிமுக நிலை பாகுபலி 2ஆ இல்லை Gladiatorஆ நீங்களே சொல்லுங்கள்

கிலாடியேட்டர் படத்தில் எனக்கு அடுத்து உனக்கு பட்டம் இல்லை, ஆட்சியை மக்களிடமே திரும்ப ஒப்படைப்பாதாக இருக்கிறேன் என்றும் அதன் பொருப்பை மிகவும் நம்பிக்கைக்கு உரிய தளபதியிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தவுடன். மாமன்னரை கட்டியணைத்து ஆருதல் சொல்லுவது போல் நய வஞ்சகமாக கொன்று. பழியை தூக்கி தளபதியின் மேல் போட்டு கொன்று விட்டால் இப்படி ஒரு திட்டம் இருந்தாக கூட யாருக்கும் தெரியாது என்றதும், பிறகு என்ன ஆனது என்றதும் தான் கதை.

செயலலிதா தானாக தான் இறந்தாரா என்ற கேள்வி தொக்கி நிற்க கிளாடியேட்டர் படம் தான் பொருத்தமாக இருக்கும். மேலும் மாமன்னர் எண்ணத்தை நிறுவ போராடும் போராளியாக அல்லவா பன்னீர் திகழ்கிறார்.

அவரை கிளாடியேட்டரில் பகிடி செய்யும் செயல்களை எல்லாம் செய்து, கடைசியில் தேர்தலிலும் நிற்க வைத்துவிட்டு, முதுகில் கைக்கு கீழே கத்தியால் ஆழ குத்தி விட்டு பிறகு மக்களின் முன்னில் ஒரே கத்தி வீச்சால் வீசி கொல்ல அழைப்பது போல். ஆர்கே நகர் தேர்தலில் எல்லா குறுக்கு வழிகளையும் கடைபிடித்து விட்டு தோற்றே போனார்கள் என்று அல்லவா பல்லவி பாட தயாரானார்கள் சதி தரப்பு, இல்லை இல்லை சசி தரப்பு.

ஏதோ 800 ADயில் நடந்த கதையாக சொன்னாலும் இந்தனை ஆண்டுகள் கழித்தும் மீண்டும் ஆட்சி கவிழ்பு என்றால் அதே தாத்தா காலத்து நுட்பம் தான் போலும்........

0 comments: