Wednesday, May 17, 2017

தமிழகத்தில் பாக்கிட்தானுக்கு என்ன வேலை

நடுக்கடலில் கப்பலை செலுத்த தெரியாமல் காற்று இழுத்து செல்லும் வழிக்கு எல்லாம் பயணமாகும் கப்பலாக அதிமுக மாறியுள்ள அற்புதத்தை பார்த்து வருகின்றோம்.

மாநிலத்தின் வருமானம் பெருக்க என்ன செய்யலாம் என்றும் கூட தெரியாத ஒரு அணி தமிழகத்தை ஆளுகின்றது.

சம்பாதிக்க துப்பு இல்லாத பிள்ளை குடும்பத்தை நடத்துகின்றேன் என்று வந்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அதிமுகவின் அரசு நடவடிக்கைகள்.

இப்படி ஒரு குடும்பத்தில் மாட்டிய அப்பாவி பிள்ளைகளாக தமிழக மக்கள் மாட்டி தவிப்பது அப்பட்டமாக தெரிகின்றது.

தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் மருத்துவ பல்கலைகழகம் தான் பட்டம் வழங்க போகின்றது, பொறியியல் கல்லூரிகளை போல.

தமிழகத்து மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மற்றும் நடத்தபடுகின்ற இந்த கல்லூரிகளுக்கு யார் யார் எல்லாம் சேர்ந்து படிக்க வேண்டும் என்றது தமிழக மக்களும் அவர்களது பிரதினிதிகளும் தான் உரிமையே தவிர பாக்கிட்தானம் இல்லை.

தகப்பன் இல்லாத வீட்டில் பக்கத்து நாட்டுகாரர்கள் எல்லாம் நாட்டாமை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதே மக்களே மக்களின் மக்களே...

இனிமே தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் நிறுவனங்களுக்கு தமிழகம் தான் தேர்வுகளை நடத்தி ஆட்களே சேர்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.....

0 comments: