Thursday, April 27, 2017

KFC PIZZA HUT DOMINOS STARBUCKS SUBWAY MCDONALD BK நிறுவனங்களுக்கு தடை வாங்க இருக்கிறது - இந்து பாரதம்

இந்தியாவில் அமைந்து இருக்கும் பாசக அரசு மேலே சொன்ன நிறுவனங்கள் மட்டும் இல்லாது மற்ற அயலக நிறுவனங்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் தடை செய்ய உள்ளது.

காரணம் உ பி தேர்தலுக்கு பிறகு பாசக அடிப்படையாக கொண்டு இருக்கும் மத சார்பு நிலைக்கு எதிரான கொள்கையான மாட்டுகறியை கொண்டு உணவுகளை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி இந்து பாரத்தின் புனிதத்தையும் இந்து மதத்தின் மீது நீங்காத களங்கத்தையும் விளைவிப்பதும் மட்டும் அல்லாது இன்னும் இலட்சம் ஆண்டும் கோடி கங்கை நீரை இந்தியா முழுவது ஊற்றி கழுவினாலும் கலையாத பாவத்தை இந்தியர்கள் செய்ய காரணமாக இருப்பதும் தான் காரணம்.

மேலும் இந்த உணவு நிறுவனங்களிடம் அவர்களது உணவில் பயன் படுத்தப்படுவது காளை மாடும் காளை கன்றுகுட்டி மட்டும் காளை கிழட்டு மாடுகளின் கறி மட்டும் தான் என்று சான்றிதழ் கொடுக்கும் படி பணிக்கப்பட்டது.

ஆனால் இந்த நிறுவனக்களால் அப்படி ஒரு சான்றிதழ்களை கொடுக்க முடியவில்லை. காரணம் கறி கொடுக்கும் நிறுவனங்களால் அப்படி உறுதி செய்ய முடியாத நிலையில் இப்படி ஒரு சான்றிதழை கொடுப்பது சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்கள்.

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக பாசக அரசு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அனைத்து மாட்டுகறியும் காளை கன்று, மாடு மற்றும் கிழட்டு காளைகளை கொண்டு தான் வெட்டிக்கொடுக்கப்படுகின்றது என்று எங்களால் சான்றிதழ் கொடுக்க முடியும் போது ஏன் உங்களால் முடியவில்லை என்று சாடியும் உள்ளது.

இப்போதைக்கு உணவகங்கள் தான் என்று நினைத்து விடாதீர்கள், உணவகங்கள் தொடர்ந்து மாட்டுகறியின் கழிவில் தயாரிக்கப்படும் Palmolive பாத்திரம் கழுவும் திரவம், Garnier Shampoo, Colgate Palmolive soap வகைகள் மற்றும் பற்பசைகள், Head and Shoulder shampooவின் 16 வகை தயாரிப்புகள், Pantine shampooவின் 12 வகை தயாரிப்புகள், Dove Shampooவின் 8 வகை தயாரிப்புகள், Tide, Surf, Rin, TATA 501, Hammam, Rexona, Chandrika, Lux, Lifeboy, Eyetext என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது அவைகளுக்கும் எங்களது அறிக்கைகளை அனுப்பியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது பாசக அரசு.

இது மட்டும் அல்லாது இந்து பெண்கள் பயன்படுத்தும் உதட்டு சாயம் முதல் முக பூச்சுகள் வரையில் மாட்டின் குடல் கழிவில் இருந்து தயாரிக்கும் நீங்கள், அவைகளிலும் காளை, காளை கன்றுக்குட்டி மற்றும் கிழட்டு காளை மாடுகளின் குடல் கழுவுகளில் இருந்து மட்டும் தான் தயாரிக்கபடுகின்றது என்று தெரிவிக்கவில்லை என்றால் அவைகளையும் இந்தியாவில் தடை செய்யப்படும் என்று பாசக அரசு தெரிவித்துள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்க நிறுவனங்கள் இப்படி திடீர் என்று இந்த தயாரிப்புகளை எல்லாம் தடை செய்துவிட்டாம் மக்கள் என்ன செய்வார்கள் என்று அப்பாவியாக கேட்க அதற்கு பாசக அரசு பாபா ராம்தேவ் நிறுவனம் 30,000 தயார்ப்புகளை ஏற்கனவே எல்லா மா நிலங்களிலும் தங்களது விற்பனை நிறுவனங்களின் சேவைகளை துவங்கிவிட்டதாகவும் இனி ஆயுர் வேத பொருட்களை தவிர இந்து பாரததின் மக்களுக்கு வேறு எந்த வேதி பொருட்களையும் அனுமதிக்க போவது இல்லை என்றும் சொன்னதோடு இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொண்டு ஒரு ஆணையையும் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வாழ்க இந்து பாரதம் வளர்க பாபா ராம்தேவ் நிறுவனங்கள்.

2020ல் இந்தியாவின் பொருட்களை தான் வேண்டும் என்று அமெரிக்க அதிபரும் இங்கிலாந்து மன்னரும் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டம் போல் போராடுவார்கள் அப்போது இருக்கும் பாரத பிரதமரோ டெல்லியிலேயே இருந்தாலும் கேவலம் இந்த அமெரிக மற்றும் இங்கிலாந்து அதிபர்களை போய் பார்ப்பதா என்று கூச்சப்பட்டு நாணி கோணி வீட்டிலேயே இருந்துவிடுவார்கள்.

0 comments: