Tuesday, May 30, 2017

உங்கள் மாடுகளுக்கு பான் கார்டும் ஆதார் கார்டும் வாங்கியாச்சா -- இல்லை என்றால் உடனே வாங்கவும்

டிசிட்டல் இந்தியாவில் எந்த எந்த மாடுகள் எந்த எந்த இடங்களில் எப்படி எல்லாம் பராமரிக்கப்படுகின்றது என்ற கணக்கை அம்பாணி மற்றும் அதாணி வாங்கி இருக்கும் அல்லது வாடகைக்கு எடுத்து இருக்கும் மென் பொருளில் ஒரு சின்ன மாற்றத்துடன் கண்காணித்து ஏ2 மாடுகளையோ அல்லது உள் நாட்டு மாடுகளையோ மக்கள் உண்பதை தடுத்து தாங்கள் விற்கப்போகும் பாக்கிட்தானத்து மாட்டிறைச்சியை தவிர மற்ற எதையும் மக்கள் உண்டுவிடக்கூடாது என்று கட்டளையிட உள்ளார்கள்.

இந்த காரணத்தை சொன்னால் நீதிமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் உதை கிடைக்கும் என்ற காரணத்தால், மாடுகளை பாதுகாக்க அவைகளுக்கு நேரடியாக மானியம் வழங்க உள்ளோம். ஆதலாம் மாடுகளுக்கு பான் மற்றும் ஆதார் அட்டைகளை புகைபடத்துட்ன் கூடிய அட்டைகள் இல்லாமல் மாடுகளை வைத்திருப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டதின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லவும் படுவீர்.

யார் யார் எல்லாம் புரட்சி செய்கிறீர்களோ போராட்டம் செய்கிறீகளோ உங்களுடைய பான் மற்றும் ஆதார் அட்டைகளை முடக்கி உணவு விடுதியில் கூட சாப்பிட முடியாமல் செய்துவிடுவார்கள்.

இந்த செய்திகள் எல்லாம் வெளியாகி ஒன்றுக்கு 10ஆக பணம் கேட்பதற்குள், நாமாக சென்று மாடு, ஆடு, கோழி, கோழி முட்டைகளுக்கு பான் மற்றும் ஆதார் அட்டைகளை புகைப்படத்துடன் பெற்றுக்கொள்வோம். விண்ணப்பிக்க டிசிட்டல் இந்தியா, கேர் ஆப் பாசக, RSS, இந்தியா(Hindia) என்ற முகவரியை அனுகவும். உங்களுக்கு யாரையாவது பிடிக்க வில்லை என்றால், அவன் அட்டை இல்லாமல் மாடும் கோழியும் வைத்துள்ளான் என்று சொல்லுங்கள் சங்க பரிவாரத்திடம் மிச்சத்தை அவர்கள் பார்த்துகொள்வார்கள்.

பி கு : இந்த டிசிட்டல் இந்தியா நடவடிக்கை தேவை இல்லாதது என்று யாராவது உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் கொமாரசாமிகளையே சந்திக்க நேரும் சாக்கிரதை

2 comments:

')) said...

எங்க வீட்டில் பசு மாடில்லையே! எருமை மாடு நாந்தான் இருக்கேன்.

')) said...

தோழி என்ன இது, அமைதி அமைதி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி