Monday, January 30, 2017

பீட்டா - இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அமைப்பு

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என்று வகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டும் வந்துள்ளது.

திடீர் என ஒருவர் காலையில் நடையாக சிங்கத்தை கூட்டிக்கொண்டு வந்தால் தெருவில் நடக்கும் மற்ற நபர்கள் என்ன செய்வார்கள் அலரி அடித்து உயிருக்கு பயந்து ஓட மாட்டார்கள்.

அடடா சிங்கம் வந்து இருக்கிறதே என்று அதை அழைத்து வந்தவரை மேடையிலே ஏற்றி பாராட்டு விழாவா நடத்துவார்கள்.

தோடு நிற்பார்களா, காவல் துறை நீதிமன்றம் என்று என்ன என்ன பாதுகாப்புகளை நிறுவி காத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் செய்வார்கள் மக்கள்.

இது இந்தியாவிலோ தமிழகத்தில் மட்டும் என்று இல்லை, உலகில் நாகரீகமே எட்டிப்பார்க்காத காட்டில் வாழும் மக்களாக இருந்தாலும் இது பொருந்தும்.

இப்படி அலரவைக்கும் விலங்கள் பட்டியலில் வீட்டில் வளர்க்கும் காளைகளை சேர்த்தது எந்த விதத்தில் ஞாயம்.

எந்த ஊரில் எந்த நாட்டில் இப்படி ஒரு தகாக செயலை செய்து இருக்கிறார்கள். இதன் நீழ்ச்சியாக் நாளை வீட்டில் வளர்க்க்கும் கோழி, வாத்து, ஆடு, அன்னம், முயல், மையில், குருவி, நாய், தொட்டியில் வளர்க்கும் மீன், பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன், எல்லாவற்றையும் வீட்டில் வளர்க்க தடை என்றும் அப்படி உங்களுக்கு வளர்க்க வேண்டும் என்றால் எங்கள் கடைகளில் விற்கும் அவைகளை வாங்கி. அவைகளுக்கு என்று நாங்கள் தயாரிக்கும் பிரத்தியோக உணவு, உடை, தங்கும் வீடு, புணர இன்னும் ஒர் சோடி என்று எல்லாவற்றையும் எங்களிடம் வாங்கி பலன் பெருங்கள்.

 நீங்கள் அப்படி வாங்கும் நாயோ பூனையோ இல்லை மீனோ குட்டிப்போட்டால் அது எங்களுக்கு தான் சொந்தம், ஏன் என்றால் நீங்கள் வாங்கும் போது வெறும் தாய்க்கு தான் பணம் கொடுத்தீர்கள், குட்டிக்கும் சேர்ந்து அல்ல என்றும் முழங்குவார்கள் இந்த பீட்டா அமைப்பாளர்கள்.

ஏன் அமெரிகாவில் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் பட்டியலில் சிங்கத்தை சேர்த்து ஒரு சட்டத்தை இயற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தானே பீட்டா. சரி பீட்டா இந்தியாவினால் முடியாது அது இராதாராசனின் வேலையும் இல்லை, பீட்டா அமெரிக்க செய்ய வேண்டியது தானே......உடனே இராதாராசன் செல்வார், பீட்டா என்ன செய்யனும் என்று நீ எல்லாம் சொல்லக்கூடாது என்று முழங்குவார்......

அது எப்படி அமெரிக்காவில் செயல்படும் ஒரு நிறுவனம் வியாபார நிறுவனம் போல் அதன் கிளையை இந்தியாவில் துவங்குகின்றது அந்த நிறுவனம் இந்தியர்கள் என்ன என்ன விலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று எப்படி ஒரு வெளி நாட்டு நிறுவனம் வரையறுக்க முடியும்.

ஒரு உதாரணத்திற்கு சொல்வோம், பாக்கிட்தானம் நாளை இந்தியர்கள் அதுவும் தென்னிதியர்கள் அதிகம் உண்ணும் அரிசி உணவை காட்டில் உண்ணும் உணவு என்று ஒரு பட்டியலை உருவாக்கி அதை தென்னிதியர்கள் உண்ணக்கூடாது என்று இந்தியாவில் ஒரு சட்டம் இயற்ற முடியும் என்றால் பாசக சும்மா பேச்சுகாவது ஒத்துக்கொள்ளுமா என்ன.

எங்களுக்கு பாக்கிட்தானமும் ஒன்று தான் அமெரிகாவும் ஒன்று தான் வெளி நாடு என்றாலோ அல்லது எதிரி நாடு என்றாலோ அது பாக்கிட்தானம் என்ற வரையரை எல்லாம் எங்களுக்கு இல்லை இல்லவே இல்லை.

அப்படி பாக்கிட்தானம் இந்தியாவில் சட்டம் இயற்றமுடியும் என்று பாசக நினைக்குமானால் நாம் மேலும் இது பற்றி விவாதிக்கலாம். இல்லை என்றால் பீட்டா செய்து இருப்பது தேச துரோகம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல் பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் விதத்திலும் ஒற்றுமைக்கு ஊருவிளைவிக்கு விதத்திலும் நடந்திருக்கிறது.

ஆக இந்த குற்றங்களுக்கு பரிகாரமாக இனி தென்னிந்திய மாநிலங்களில் அவர்கள் இனி மனிதர்களை காக்கும் இயக்கமாக இன்னும் 20 ஆண்டுகளுக்கு பணியாற்ற நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்று விழைவோமாக.

மனிதர்கள் எல்லாம் எனது கண்ணுக்கு தெரியாது என்று சொன்ன விலங்கு ஆர்வலர்கள் தென்னகத்து மக்களுக்கு சேவைகள் செய்யட்டும் அப்படியே முடிந்தால் வீட்டு விலங்குகளுக்கும் சேவை செய்யட்டும்.

0 comments: